நெற்றியில் தவழும் கூந்தலா
இழுக்கும் மென்மை விரல்களா
மயக்கும் அழகு உடலா
அன்பை சொரியும் விழியா
முடியை கோதும் அழகா
தென்றலில் பறக்கும் புடவையா
சிரிப்பில் தெரியும் கன்னக்குழியா
சுவைக்கும் இனிமைக் குரலா
உடையில் வெளிபடும் அடக்கமா
நிலம் அதிராத நடையா
மெல்லினமாய் பூக்கும் புன்சிரிப்பா
பாசத்தில் தழும்பும் கண்ணீரா
உரிமையுடன் உறவாடும் அழகா
உதவும் நேசக் கரமா
கசப்பை ஏற்கும் அமைதியா
குதூகலிக்கும் குழந்தை உள்ளமா
இயற்கையை விரும்பும் ரசனையா
ஏங்கும் இதயக் காதலா
அசட்டை செய்யாத குணமா
கலங்கும் மனித நேயமா
எழுத்தில் ஒளிரும் மென்மையா
பிரிக்கத் தெரியாத இதயமா
கோபம் அறியாத மனமா
தவழ்ந்து பயிலும் விருப்பமா
வஞ்சம் இல்லாத நெஞ்சமா
வருவதை ஏற்கும் மௌனமா
புரிந்து கொள்ளும் பொறுமையா
ஒதுங்கி போகும் அடக்கமா
தனித்தனியே இருப்பது நளினமா
சேர்ந்தே நடைபயில்வது நளினமா
இவையின்றி இருப்பதும் நளினமா
நளினமே வெறும் கட்டுக்கதையா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எல்லாமே நளினம் தான்..
பார்க்கும் பார்வையை பொறுத்தது...
Surya
Dubai
Post a Comment