உன் குரலிலே காந்தம் கண்டேன்
உன் இசையிலே இனிமைக் கண்டேன்
உன் மொழியிலே ரசனைக் கண்டேன்
உன் ராகத்திலே கலையைக் கண்டேன்
உன் பாவத்திலே உருக்கம் கண்டேன்
உன் கானத்திலே விருப்பம் கொண்டேன்
உன் பக்தியிலே இறையைக் கண்டேன்
உன் பாட்டிலே சிரத்தை கண்டேன்
உன் நடையிலே இசையைக் கண்டேன்
உன் அசைவுகளே இசைப்பதைக் கண்டேன்
உன் காதலே இசையாய் கண்டேன்
உன் அதிர்வுகளே இசையென்றுக் கண்டேன்
உன் ஓசையிலும் அழகினைக் கண்டேன்
உன் உருவம் நிலைக்கக் கண்டேன்
உன் புகழை வானளவுக் கண்டேன்
உன் சிறப்பே நீயெனக் கண்டேன்
[This poem was read out in Bahrain FM 104.2 on 17/04/2007]
Thursday, April 19, 2007
கண்டேன் கண்டேன்
விழியிலே காந்தம் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்
சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்
நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்
காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்
ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்
அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்
கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்
கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்
சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்
நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்
காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்
ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்
அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்
கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்
கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்
Friday, April 13, 2007
உறைந்த கட்டங்கள்
அரங்கமே மின்னொளியால் குளிக்க
ரசிகர்களும் பண்பாய் அமர
அந்நாளின் காவியத்தைக் காண
மேடையும் தயாராய் நின்றதுவே
பரப்பரப்பின் உச்சத்தில் நின்றபடி
அக்காவியத்தின் நாயகரை கண்டுவிட
அரங்கமும் எதிர்பார்ப்பில் அதிர்ந்தபடி
வரவேற்பை தந்து மகிழ்ந்ததுவே
மூச்சையடக்கி காத்திருந்த மக்களின்
அசைவற்ற அவ்விடத்தின் அமைதியோ
உலகின் உன்னத இசைக்குழுவின்
ஸ்வரங்களைவிட சிறந்து இசைத்தனவே
கூட்டத்தின் நெருக்கடியில் நானும்
மெல்ல மெல்ல நடந்துவந்து
அக்கம்பக்கம் முறைப்பை தவிர்க்க
ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தேனே
ஒளியணைத்த அரங்கில் இனி
நாடகத்தை கண்டுவிடும் துடிப்பில்
மக்களும் ஆரவாரமாய் கைதட்ட
திரையும் சிறிதுசிறிதாய் விலகியதே
மான் விழி மிரட்சியுடன்
மலரினும் மென்மையாய் திகழ்ந்த
அழகான பெண்ணொருத்தி வந்து
மேடையில் மலர்ந்து நின்றனளே
கேவலின் இடையிலும் சிரித்தபடி
வேதனையிலும் நடனமாடி களித்தபடி
குயிலாய் ரசித்து பாடியபடி
சுயசரிதையை படம்பிடித்து காட்டினாளே
அவள் உள்ளத்தின் அழகினிலே
அரங்கமே அதிசயித்து மயங்க
நடிப்பை நிறுத்தி சிறிதே
அங்குமிங்கும் நடந்து சென்றனளே
தோற்ற வாழ்வினைக் கண்டு
மனமிரங்கி இதயம் கசிந்து
கண்ணீரால் வரைந்த முகங்களை
நானும் கண்டு கொண்டேனே
சலிப்பின்றி அலுப்பின்றி நடந்து
தள்ளாடி தடுமாறி உடைந்து
இறுதியில் விழுந்தவளைக் கண்டு
என் கண்களும் கலங்கினவே
விறகுகள் முட்டுக் கொடுக்க
அவளுடலும் அதில் அமைதியுற
அக்னியின் ஆசைக்கு அளவின்றி
வளர்ந்து உயர்ந்து அணைத்தனவே
கல்நெஞ்சும் உருகும் இந்நிகழ்ச்சியை
தோல்வியில் முடிந்த இவ்வாழ்வை
கைத்தட்டி மரியாதை தந்தாலும்
நல்ல நாடகம் என்றே கதைத்தனரே
நுண்ணிய உணர்வுகளையும் கூட
அபாரமாய் வெளிப்படுத்தி நடித்த
அப்பெண்ணை உயர்த்தி பேசியே
ஒருவர் உரக்க உருகினாரே
முடிவில் திரையும் விழுந்துவிட
வாசலை நோக்கி ஓடிய
ரசிகர்களும் தத்தம் உலகை
காணவே விரைந்து ஓடினரே
நடிகர்கள் அனைவரும் சென்றுவிட
விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட
கதவும் மூடப்பட்ட நிலையில்
இருட்டிலே தனிமையில் விடப்பட்டேனே
காலமெனும் உறைந்த கட்டங்களில்
சோகமெனும் நெஞ்சின் ரணங்களில்
துளிகளாய் இருசொட்டு கண்ணீரால்
என் முகமும் அலங்கரித்தனவே
உணர்ந்தேன் நானே நாயகியென
சிலிர்த்தேன் அரங்கேறியது என்வாழ்வென
நடித்தேன் நேர்த்தியாய் அழகுடனென
என் தட்டலில் அரங்கமே அதிர்ந்ததுவே
புன்னகை முகத்தில் தவழ
உடலற்று எழுந்து நின்று
உயிராய் சுவற்றைக் கிழித்து வெளியே
வீசுதென்றலில் விடுதலை உணர்ந்தேனே
ரசிகர்களும் பண்பாய் அமர
அந்நாளின் காவியத்தைக் காண
மேடையும் தயாராய் நின்றதுவே
பரப்பரப்பின் உச்சத்தில் நின்றபடி
அக்காவியத்தின் நாயகரை கண்டுவிட
அரங்கமும் எதிர்பார்ப்பில் அதிர்ந்தபடி
வரவேற்பை தந்து மகிழ்ந்ததுவே
மூச்சையடக்கி காத்திருந்த மக்களின்
அசைவற்ற அவ்விடத்தின் அமைதியோ
உலகின் உன்னத இசைக்குழுவின்
ஸ்வரங்களைவிட சிறந்து இசைத்தனவே
கூட்டத்தின் நெருக்கடியில் நானும்
மெல்ல மெல்ல நடந்துவந்து
அக்கம்பக்கம் முறைப்பை தவிர்க்க
ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தேனே
ஒளியணைத்த அரங்கில் இனி
நாடகத்தை கண்டுவிடும் துடிப்பில்
மக்களும் ஆரவாரமாய் கைதட்ட
திரையும் சிறிதுசிறிதாய் விலகியதே
மான் விழி மிரட்சியுடன்
மலரினும் மென்மையாய் திகழ்ந்த
அழகான பெண்ணொருத்தி வந்து
மேடையில் மலர்ந்து நின்றனளே
கேவலின் இடையிலும் சிரித்தபடி
வேதனையிலும் நடனமாடி களித்தபடி
குயிலாய் ரசித்து பாடியபடி
சுயசரிதையை படம்பிடித்து காட்டினாளே
அவள் உள்ளத்தின் அழகினிலே
அரங்கமே அதிசயித்து மயங்க
நடிப்பை நிறுத்தி சிறிதே
அங்குமிங்கும் நடந்து சென்றனளே
தோற்ற வாழ்வினைக் கண்டு
மனமிரங்கி இதயம் கசிந்து
கண்ணீரால் வரைந்த முகங்களை
நானும் கண்டு கொண்டேனே
சலிப்பின்றி அலுப்பின்றி நடந்து
தள்ளாடி தடுமாறி உடைந்து
இறுதியில் விழுந்தவளைக் கண்டு
என் கண்களும் கலங்கினவே
விறகுகள் முட்டுக் கொடுக்க
அவளுடலும் அதில் அமைதியுற
அக்னியின் ஆசைக்கு அளவின்றி
வளர்ந்து உயர்ந்து அணைத்தனவே
கல்நெஞ்சும் உருகும் இந்நிகழ்ச்சியை
தோல்வியில் முடிந்த இவ்வாழ்வை
கைத்தட்டி மரியாதை தந்தாலும்
நல்ல நாடகம் என்றே கதைத்தனரே
நுண்ணிய உணர்வுகளையும் கூட
அபாரமாய் வெளிப்படுத்தி நடித்த
அப்பெண்ணை உயர்த்தி பேசியே
ஒருவர் உரக்க உருகினாரே
முடிவில் திரையும் விழுந்துவிட
வாசலை நோக்கி ஓடிய
ரசிகர்களும் தத்தம் உலகை
காணவே விரைந்து ஓடினரே
நடிகர்கள் அனைவரும் சென்றுவிட
விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட
கதவும் மூடப்பட்ட நிலையில்
இருட்டிலே தனிமையில் விடப்பட்டேனே
காலமெனும் உறைந்த கட்டங்களில்
சோகமெனும் நெஞ்சின் ரணங்களில்
துளிகளாய் இருசொட்டு கண்ணீரால்
என் முகமும் அலங்கரித்தனவே
உணர்ந்தேன் நானே நாயகியென
சிலிர்த்தேன் அரங்கேறியது என்வாழ்வென
நடித்தேன் நேர்த்தியாய் அழகுடனென
என் தட்டலில் அரங்கமே அதிர்ந்ததுவே
புன்னகை முகத்தில் தவழ
உடலற்று எழுந்து நின்று
உயிராய் சுவற்றைக் கிழித்து வெளியே
வீசுதென்றலில் விடுதலை உணர்ந்தேனே
Friday, April 06, 2007
நளினம் எது?
நெற்றியில் தவழும் கூந்தலா
இழுக்கும் மென்மை விரல்களா
மயக்கும் அழகு உடலா
அன்பை சொரியும் விழியா
முடியை கோதும் அழகா
தென்றலில் பறக்கும் புடவையா
சிரிப்பில் தெரியும் கன்னக்குழியா
சுவைக்கும் இனிமைக் குரலா
உடையில் வெளிபடும் அடக்கமா
நிலம் அதிராத நடையா
மெல்லினமாய் பூக்கும் புன்சிரிப்பா
பாசத்தில் தழும்பும் கண்ணீரா
உரிமையுடன் உறவாடும் அழகா
உதவும் நேசக் கரமா
கசப்பை ஏற்கும் அமைதியா
குதூகலிக்கும் குழந்தை உள்ளமா
இயற்கையை விரும்பும் ரசனையா
ஏங்கும் இதயக் காதலா
அசட்டை செய்யாத குணமா
கலங்கும் மனித நேயமா
எழுத்தில் ஒளிரும் மென்மையா
பிரிக்கத் தெரியாத இதயமா
கோபம் அறியாத மனமா
தவழ்ந்து பயிலும் விருப்பமா
வஞ்சம் இல்லாத நெஞ்சமா
வருவதை ஏற்கும் மௌனமா
புரிந்து கொள்ளும் பொறுமையா
ஒதுங்கி போகும் அடக்கமா
தனித்தனியே இருப்பது நளினமா
சேர்ந்தே நடைபயில்வது நளினமா
இவையின்றி இருப்பதும் நளினமா
நளினமே வெறும் கட்டுக்கதையா
இழுக்கும் மென்மை விரல்களா
மயக்கும் அழகு உடலா
அன்பை சொரியும் விழியா
முடியை கோதும் அழகா
தென்றலில் பறக்கும் புடவையா
சிரிப்பில் தெரியும் கன்னக்குழியா
சுவைக்கும் இனிமைக் குரலா
உடையில் வெளிபடும் அடக்கமா
நிலம் அதிராத நடையா
மெல்லினமாய் பூக்கும் புன்சிரிப்பா
பாசத்தில் தழும்பும் கண்ணீரா
உரிமையுடன் உறவாடும் அழகா
உதவும் நேசக் கரமா
கசப்பை ஏற்கும் அமைதியா
குதூகலிக்கும் குழந்தை உள்ளமா
இயற்கையை விரும்பும் ரசனையா
ஏங்கும் இதயக் காதலா
அசட்டை செய்யாத குணமா
கலங்கும் மனித நேயமா
எழுத்தில் ஒளிரும் மென்மையா
பிரிக்கத் தெரியாத இதயமா
கோபம் அறியாத மனமா
தவழ்ந்து பயிலும் விருப்பமா
வஞ்சம் இல்லாத நெஞ்சமா
வருவதை ஏற்கும் மௌனமா
புரிந்து கொள்ளும் பொறுமையா
ஒதுங்கி போகும் அடக்கமா
தனித்தனியே இருப்பது நளினமா
சேர்ந்தே நடைபயில்வது நளினமா
இவையின்றி இருப்பதும் நளினமா
நளினமே வெறும் கட்டுக்கதையா
மனமும் இதயமும் – உரையாடல் மூன்று
[அன்று செவ்வாய்கிழமை. கவிஞன் திரைபடம் காண திரையரங்கு செல்கிறான். இடைவேளை வருகிறது. வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கிறான். அச்சமயம் அவன் மனமும், இதயமும் பேசுவதை கவனிக்க தொடங்குகிறான்....]
மனம் : இதயமா? நீயெங்கே இங்கே?
இதயம் : ஏன்? இங்கு நான் வரக் கூடாதா? சரி. அதை விடு. எப்படி இருக்கிறாய்?
மனம் : நன்றாக இருக்கிறேன். நீ?
இதயம் : நானும்
(மௌனமாய் சில கணங்கள் கழிகிறது.....)
மனம் : ஏன் அமைதியாகிவிட்டாய்?
இதயம் : ஒன்றுமில்லையே
மனம் : சென்ற முறை பேசிய தத்துவங்கள் கேட்டு இதையெல்லாம் நீ விரும்பமாட்டாய் என்று நினைத்தேன்
இதயம் : அது உன் தவறு. நான் புறவுலகையும் அகவுலகையும் ரசிப்பவள்
மனம் : உன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
இதயம் : தத்துவம் பேசினால் திரைபடத்தை ரசிக்கக் கூடாது என்று எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ன?
மனம் : அது சரி. திரையில் காண்பவைக் கண்டு நிலை தவற மாட்டாயா?
இதயம் : இல்லையென்று நினைக்கிறேன்
யாரோ ஒரு குரல் : இதயமே, உண்மைதானா?
மனம், இதயம் : யார் நீ?
யாரோ : என்னைப் பற்றி இருக்கட்டும். ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே….உங்கள் உரையாடல்களை நானும் பல வருடங்களாக கேட்டவன் என்ற முறையில்.............
மனம் : என்ன திமிர்? ஒட்டு கேட்பது தவறல்லவோ?
யாரோ : என்னிடம் அதைப் பற்றி நீ சொல்லாதே. ஹி ஹி... (இருவரையும் பார்த்து) நான் உங்கள் முகமறியா உறவினன்.
இதயம் : சரி. என்ன வேண்டும் உனக்கு?
யாரோ : உங்கள் இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். யாரை முதலில் கேட்கட்டும்?
மனம் : இதயம் ஒத்துக் கொண்டதால் நீ பிழைத்தாய். என்னை முதலில் கேள்
யாரோ : நன்றி. ஆரம்பிப்போமா?
மனம் : சரி
யாரோ : கவனமாகக் கேட்டு பதில் கூறு
மனம் : (அலட்சியமாக) சீக்கிரம் கேள். எங்கள் இருவருக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது
யாரோ : (நமுட்டு சிரிப்புடன்) அது எனக்கு தெரியும்
(இதயம் அங்கிருந்து நகர்கிறாள்)
யாரோ : நீ எப்பொழுது பிறந்தாய்?
மனம் : (யோசித்துவிட்டு) தெரியாது
யாரோ : உன் இறப்பைப் பற்றித் தெரியுமா?
மனம் : .............. தெரியாது
யாரோ : இதைப் பற்றி யாராவது உனக்கு கூறினார்களா?
மனம் : இல்லை
யாரோ : ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?
மனம் : எனக்கு தோன்றவில்லை
யாரோ : நீ யார் என்பதாவது தெரியுமா?
மனம் : ஆம். நான் ‘மனம்’
யாரோ : ‘மனம்’ என்றால்?
மனம் : எண்ணக் கலவை நான்
யாரோ : எந்த நிறக்கலவை?
மனம் : (பெருமையுடன்) அனைத்து நிறமும் உண்டு
யாரோ : எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?
மனம் : பார்ப்பவை, கேட்பவை, ரசிப்பவை – இவையே எண்ணங்களின் மூலம் ஆகின்றன
யாரோ : அப்படியா? நன்று. யார் பார்க்கிறார்கள்? யார் கேட்கிறார்கள்?
மனம் : உடலின் கண்களும் செவியும்
யாரோ : அருமை. உன் வாழ்க்கை குறிக்கோள் என்ன?
மனம் : பெரிதாக ஒன்றுமில்லை. என்னை பன்மடங்காக பெருக்கிக் கொள்வதில் எனக்கு மிக்க ஆர்வம்
யாரோ : அப்படியெனில் பல வண்ணங்களில் பல பரிமாணங்களில் அனுதினமும் விரிவடைவாய் என்று சொல்?
மனம் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்
யாரோ : எண்ணங்களை என்ன செய்கிறாய்?
மனம் : கவிஞனின் வாழ்க்கையில் கலக்கிறேன்
யாரோ : நல்லவையா, கெட்டவையா?
மனம் : எனக்கெப்படி தெரியும்?
யாரோ : அதுவும் சரிதான். கவிஞன் உன்னை மதிக்கிறானா?
மனம் : பல நேரங்களில். (குரலைத் தாழ்த்தி) சில நேரங்களில் இதயத்தை மிகவும் மதிக்கிறான்
யாரோ : உனக்கு இதயத்தின் மேல் காதல் அல்லவோ?
மனம் : உண்டு. ஆனால், என்னை அவள் வீழ்த்துவது எனக்கு பிடிக்கவில்லை
யாரோ : ஓ..... எண்ணங்களை எப்படி கவிஞன் வாழ்க்கையில் கலக்கிறாய்?
மனம் : அவனையும் அறியாமல் பலவித எண்ண அம்புகளை நானாவிதத்திலும் ஒரே நேரத்தில் எய்துகிறேன்
யாரோ : உன்னை புறக்கணிக்கும் பொழுது என்ன செய்கிறாய்? இதயம் தானே என்று விட்டுக் கொடுப்பாயா?
மனம் : (காதில் கிசுகிசுத்தபடி) மாட்டேன். என்னால் முடிந்தளவு கவிஞனை தொந்தரவு செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்கே எனக்கு மட்டும் வெற்றி கிட்டும் வரை
யாரோ : இத்தனை கர்வமா? நல்லது. உன் தொந்தரவு தாங்காமல் உன்னை கொல்ல நினைத்தால்?
மனம் : அப்படியும் நடக்குமா?
யாரோ : வாய்ப்புண்டு.
மனம் : என்னை ஏன் பயமுறுத்துகிறாய்? நீ யார்?
யாரோ : பொறுத்திரு........... (சிரித்துக் கொண்டே இதயத்தை உற்று நோக்குகிறான். ஒரு மலரைப் போல் வந்து அமர்கிறாள் இதயம்)
யாரோ : (மென்மையாக) இதயமே, நலமா?
இதயம் : நலம் ஐயா
யாரோ : அன்னியனான என்னை எப்படி ஏற்றுக் கொண்டாய்?
இதயம் : என்னதான் கூறுகிறீர்கள் என்று கேட்போமே என்றுதான்
யாரோ : நன்று நன்று. மனதுடனான உன் உரையாடல்களை கேட்டு சிரித்து விட்டேன்
இதயம் : ஏன்? ஏதாவது தவறா?
யாரோ : தத்துவம் பேசியுள்ளாய். ஆனால் உண்மையில் நீ அப்படியா?
இதயம் : இருக்க முயல்கிறேன்
யாரோ : முயல்வது வேறு, இருப்பது வேறு. (சிரிக்கிறான்)
இதயம் : ..........................
யாரோ : சரி சரி. நான் உன்னை புகழ்ந்தால் என்ன செய்வாய்?
இதயம் : நன்றி கூறுவேன்
யாரோ : உன்னை அன்பு செய்தால்?
இதயம் : நெகிழ்வேன்
யாரோ : உன்னை இகழ்ந்தால்?
இதயம் : மிகவும் துன்பப்படுவேன் ஐயா
யாரோ : புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் அன்பிலும் தெறிக்கும் அகங்காரத்தை காணவில்லையா?
இதயம் : புரியவில்லையே
யாரோ : நீ எத்தனை அப்பாவியாக இருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. ஆனால் கடந்த காலத்தில் வாழ்பவளோ?
இதயம் : செய்நன்றி மறப்பவளல்ல நான்
யாரோ : நிகழ்காலத்தில் வாழ்வது என்று எதை கூறுகிறாய்?
இதயம் : சந்தர்ப்பங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப நானும் இருக்கிறேன்
யாரோ : அப்படியெனில் அழுது கொண்டோ, சிரித்து கொண்டோ இருப்பாயோ?
இதயம் : (புன்முறுவல்) துன்பத்தில் நிச்சயம் வலியின் மிகுதியால் கண்ணீர் விடுவேன்
யாரோ : அப்படியா? மகிழ்ச்சியில் எங்ஙனம் உணர்வாய்?
இதயம் : பறப்பதைப் போல் உணர்வேன்
யாரோ : மயங்காதவள், ஏங்காதவள், கோபமில்லை, வஞ்சமில்லை ஆணவமில்லை என்றெல்லாம் மனதிடம் படம் விட்டிருக்கிறாயே, நான் ஒன்று கேட்கட்டுமா?
இதயம் : கேளுங்கள், ஐயா. தெரிந்தால் பதில் தருகிறேன்
யாரோ : உனக்கு பிடித்தோரை உன்னில் இருத்திக் கொள்கிறாய். வேண்டாதோரை ஒதுக்குகிறாய். இது எதனால்?
இதயம் : (முழிக்கிறாள்) நான் இப்படியே வளர்ந்து விட்டேன். மேலும் மனதின் சகவாசமும் தற்பொழுது கூடி விட்டது. அதனால்.........
யாரோ : உன்னைப் பற்றி மட்டும் கூறு. மனதை ஏன் இங்கு இழுக்கிறாய்?
இதயம் : மன்னிக்கவும். உங்களுக்கு தெரியுமா?
யாரோ : ம்ம்ம்ம்.... எனக்கு தெரியும். ஆனால் உன்னைப் பற்றி உனக்கே சரியாக தெரியவில்லை.
இதயம் : (தலைகுனிகிறாள்)
யாரோ : பரவாயில்லை. கவிஞனை மிகவும் பிடிக்குமோ?
இதயம் : ஆம்.
யாரோ : அப்படி வா வழிக்கு. எதனால்?
இதயம் : ‘நான்’ தான் கவிஞன் என்பதால்
யாரோ : ஓ.....அந்த கவிஞனின் உடல் அழிந்தால்?
இதயம் : ஹா....
யாரோ : பிறகு என்னாவாய் என்று தெரியுமா?
இதயம் : நானும் அழிய வேண்டியதுதான்
யாரோ : அவசியமில்லை
இதயம் : எப்படி சொல்கிறீர்கள்?
யாரோ : என்னருகில் இருப்பவளாயிற்றே நீ
இதயம் : அப்படியெனில் தங்களுக்கு அழிவில்லையா?
யாரோ : இல்லை
இதயம் : தாங்கள் யார்?
யாரோ : பொறுத்திரு...............
(இருவரையும் அழைக்கிறான் யாரோ)
யாரோ : உங்களுடன் அளவலாவியதில் மிக்க மகிழ்ச்சி.
மனமே, உன் அழிவு என்று நான் கூறியது உன் எண்ணங்களின் நிறங்களை. ஆம். அவை அனைத்தும் மறைந்து வெண்மையாகி விட வாய்ப்புண்டு நீ இதயத்துடன் சேர்ந்தால்.
இதயமே, உன் பலவீனமே, மனதின் சாயை உன் மேல் படிவதால்தான். மனதை தூய்மைப்படுத்து. உன் பலவீனம் தானாக மறைந்து விடும்.
உங்கள் காதல் அமரத்துவம் அடையட்டும்.
போவதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானின்றி நீங்கள் இல்லை என்பதை மட்டும் எப்பொழுதும் மறக்க வேண்டாம்.
சரி. நான் வரட்டுமா?
மனமும் இதயமும் : (மரியாதையுடன்) எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவரே, நன்றி. தாங்கள் யார்?
யாரோ : நான்.... நான்..... நான்தான் உயிர்..... ஆன்மா.
மனம் : இதயமா? நீயெங்கே இங்கே?
இதயம் : ஏன்? இங்கு நான் வரக் கூடாதா? சரி. அதை விடு. எப்படி இருக்கிறாய்?
மனம் : நன்றாக இருக்கிறேன். நீ?
இதயம் : நானும்
(மௌனமாய் சில கணங்கள் கழிகிறது.....)
மனம் : ஏன் அமைதியாகிவிட்டாய்?
இதயம் : ஒன்றுமில்லையே
மனம் : சென்ற முறை பேசிய தத்துவங்கள் கேட்டு இதையெல்லாம் நீ விரும்பமாட்டாய் என்று நினைத்தேன்
இதயம் : அது உன் தவறு. நான் புறவுலகையும் அகவுலகையும் ரசிப்பவள்
மனம் : உன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
இதயம் : தத்துவம் பேசினால் திரைபடத்தை ரசிக்கக் கூடாது என்று எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ன?
மனம் : அது சரி. திரையில் காண்பவைக் கண்டு நிலை தவற மாட்டாயா?
இதயம் : இல்லையென்று நினைக்கிறேன்
யாரோ ஒரு குரல் : இதயமே, உண்மைதானா?
மனம், இதயம் : யார் நீ?
யாரோ : என்னைப் பற்றி இருக்கட்டும். ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே….உங்கள் உரையாடல்களை நானும் பல வருடங்களாக கேட்டவன் என்ற முறையில்.............
மனம் : என்ன திமிர்? ஒட்டு கேட்பது தவறல்லவோ?
யாரோ : என்னிடம் அதைப் பற்றி நீ சொல்லாதே. ஹி ஹி... (இருவரையும் பார்த்து) நான் உங்கள் முகமறியா உறவினன்.
இதயம் : சரி. என்ன வேண்டும் உனக்கு?
யாரோ : உங்கள் இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். யாரை முதலில் கேட்கட்டும்?
மனம் : இதயம் ஒத்துக் கொண்டதால் நீ பிழைத்தாய். என்னை முதலில் கேள்
யாரோ : நன்றி. ஆரம்பிப்போமா?
மனம் : சரி
யாரோ : கவனமாகக் கேட்டு பதில் கூறு
மனம் : (அலட்சியமாக) சீக்கிரம் கேள். எங்கள் இருவருக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது
யாரோ : (நமுட்டு சிரிப்புடன்) அது எனக்கு தெரியும்
(இதயம் அங்கிருந்து நகர்கிறாள்)
யாரோ : நீ எப்பொழுது பிறந்தாய்?
மனம் : (யோசித்துவிட்டு) தெரியாது
யாரோ : உன் இறப்பைப் பற்றித் தெரியுமா?
மனம் : .............. தெரியாது
யாரோ : இதைப் பற்றி யாராவது உனக்கு கூறினார்களா?
மனம் : இல்லை
யாரோ : ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?
மனம் : எனக்கு தோன்றவில்லை
யாரோ : நீ யார் என்பதாவது தெரியுமா?
மனம் : ஆம். நான் ‘மனம்’
யாரோ : ‘மனம்’ என்றால்?
மனம் : எண்ணக் கலவை நான்
யாரோ : எந்த நிறக்கலவை?
மனம் : (பெருமையுடன்) அனைத்து நிறமும் உண்டு
யாரோ : எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?
மனம் : பார்ப்பவை, கேட்பவை, ரசிப்பவை – இவையே எண்ணங்களின் மூலம் ஆகின்றன
யாரோ : அப்படியா? நன்று. யார் பார்க்கிறார்கள்? யார் கேட்கிறார்கள்?
மனம் : உடலின் கண்களும் செவியும்
யாரோ : அருமை. உன் வாழ்க்கை குறிக்கோள் என்ன?
மனம் : பெரிதாக ஒன்றுமில்லை. என்னை பன்மடங்காக பெருக்கிக் கொள்வதில் எனக்கு மிக்க ஆர்வம்
யாரோ : அப்படியெனில் பல வண்ணங்களில் பல பரிமாணங்களில் அனுதினமும் விரிவடைவாய் என்று சொல்?
மனம் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்
யாரோ : எண்ணங்களை என்ன செய்கிறாய்?
மனம் : கவிஞனின் வாழ்க்கையில் கலக்கிறேன்
யாரோ : நல்லவையா, கெட்டவையா?
மனம் : எனக்கெப்படி தெரியும்?
யாரோ : அதுவும் சரிதான். கவிஞன் உன்னை மதிக்கிறானா?
மனம் : பல நேரங்களில். (குரலைத் தாழ்த்தி) சில நேரங்களில் இதயத்தை மிகவும் மதிக்கிறான்
யாரோ : உனக்கு இதயத்தின் மேல் காதல் அல்லவோ?
மனம் : உண்டு. ஆனால், என்னை அவள் வீழ்த்துவது எனக்கு பிடிக்கவில்லை
யாரோ : ஓ..... எண்ணங்களை எப்படி கவிஞன் வாழ்க்கையில் கலக்கிறாய்?
மனம் : அவனையும் அறியாமல் பலவித எண்ண அம்புகளை நானாவிதத்திலும் ஒரே நேரத்தில் எய்துகிறேன்
யாரோ : உன்னை புறக்கணிக்கும் பொழுது என்ன செய்கிறாய்? இதயம் தானே என்று விட்டுக் கொடுப்பாயா?
மனம் : (காதில் கிசுகிசுத்தபடி) மாட்டேன். என்னால் முடிந்தளவு கவிஞனை தொந்தரவு செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்கே எனக்கு மட்டும் வெற்றி கிட்டும் வரை
யாரோ : இத்தனை கர்வமா? நல்லது. உன் தொந்தரவு தாங்காமல் உன்னை கொல்ல நினைத்தால்?
மனம் : அப்படியும் நடக்குமா?
யாரோ : வாய்ப்புண்டு.
மனம் : என்னை ஏன் பயமுறுத்துகிறாய்? நீ யார்?
யாரோ : பொறுத்திரு........... (சிரித்துக் கொண்டே இதயத்தை உற்று நோக்குகிறான். ஒரு மலரைப் போல் வந்து அமர்கிறாள் இதயம்)
யாரோ : (மென்மையாக) இதயமே, நலமா?
இதயம் : நலம் ஐயா
யாரோ : அன்னியனான என்னை எப்படி ஏற்றுக் கொண்டாய்?
இதயம் : என்னதான் கூறுகிறீர்கள் என்று கேட்போமே என்றுதான்
யாரோ : நன்று நன்று. மனதுடனான உன் உரையாடல்களை கேட்டு சிரித்து விட்டேன்
இதயம் : ஏன்? ஏதாவது தவறா?
யாரோ : தத்துவம் பேசியுள்ளாய். ஆனால் உண்மையில் நீ அப்படியா?
இதயம் : இருக்க முயல்கிறேன்
யாரோ : முயல்வது வேறு, இருப்பது வேறு. (சிரிக்கிறான்)
இதயம் : ..........................
யாரோ : சரி சரி. நான் உன்னை புகழ்ந்தால் என்ன செய்வாய்?
இதயம் : நன்றி கூறுவேன்
யாரோ : உன்னை அன்பு செய்தால்?
இதயம் : நெகிழ்வேன்
யாரோ : உன்னை இகழ்ந்தால்?
இதயம் : மிகவும் துன்பப்படுவேன் ஐயா
யாரோ : புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் அன்பிலும் தெறிக்கும் அகங்காரத்தை காணவில்லையா?
இதயம் : புரியவில்லையே
யாரோ : நீ எத்தனை அப்பாவியாக இருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. ஆனால் கடந்த காலத்தில் வாழ்பவளோ?
இதயம் : செய்நன்றி மறப்பவளல்ல நான்
யாரோ : நிகழ்காலத்தில் வாழ்வது என்று எதை கூறுகிறாய்?
இதயம் : சந்தர்ப்பங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப நானும் இருக்கிறேன்
யாரோ : அப்படியெனில் அழுது கொண்டோ, சிரித்து கொண்டோ இருப்பாயோ?
இதயம் : (புன்முறுவல்) துன்பத்தில் நிச்சயம் வலியின் மிகுதியால் கண்ணீர் விடுவேன்
யாரோ : அப்படியா? மகிழ்ச்சியில் எங்ஙனம் உணர்வாய்?
இதயம் : பறப்பதைப் போல் உணர்வேன்
யாரோ : மயங்காதவள், ஏங்காதவள், கோபமில்லை, வஞ்சமில்லை ஆணவமில்லை என்றெல்லாம் மனதிடம் படம் விட்டிருக்கிறாயே, நான் ஒன்று கேட்கட்டுமா?
இதயம் : கேளுங்கள், ஐயா. தெரிந்தால் பதில் தருகிறேன்
யாரோ : உனக்கு பிடித்தோரை உன்னில் இருத்திக் கொள்கிறாய். வேண்டாதோரை ஒதுக்குகிறாய். இது எதனால்?
இதயம் : (முழிக்கிறாள்) நான் இப்படியே வளர்ந்து விட்டேன். மேலும் மனதின் சகவாசமும் தற்பொழுது கூடி விட்டது. அதனால்.........
யாரோ : உன்னைப் பற்றி மட்டும் கூறு. மனதை ஏன் இங்கு இழுக்கிறாய்?
இதயம் : மன்னிக்கவும். உங்களுக்கு தெரியுமா?
யாரோ : ம்ம்ம்ம்.... எனக்கு தெரியும். ஆனால் உன்னைப் பற்றி உனக்கே சரியாக தெரியவில்லை.
இதயம் : (தலைகுனிகிறாள்)
யாரோ : பரவாயில்லை. கவிஞனை மிகவும் பிடிக்குமோ?
இதயம் : ஆம்.
யாரோ : அப்படி வா வழிக்கு. எதனால்?
இதயம் : ‘நான்’ தான் கவிஞன் என்பதால்
யாரோ : ஓ.....அந்த கவிஞனின் உடல் அழிந்தால்?
இதயம் : ஹா....
யாரோ : பிறகு என்னாவாய் என்று தெரியுமா?
இதயம் : நானும் அழிய வேண்டியதுதான்
யாரோ : அவசியமில்லை
இதயம் : எப்படி சொல்கிறீர்கள்?
யாரோ : என்னருகில் இருப்பவளாயிற்றே நீ
இதயம் : அப்படியெனில் தங்களுக்கு அழிவில்லையா?
யாரோ : இல்லை
இதயம் : தாங்கள் யார்?
யாரோ : பொறுத்திரு...............
(இருவரையும் அழைக்கிறான் யாரோ)
யாரோ : உங்களுடன் அளவலாவியதில் மிக்க மகிழ்ச்சி.
மனமே, உன் அழிவு என்று நான் கூறியது உன் எண்ணங்களின் நிறங்களை. ஆம். அவை அனைத்தும் மறைந்து வெண்மையாகி விட வாய்ப்புண்டு நீ இதயத்துடன் சேர்ந்தால்.
இதயமே, உன் பலவீனமே, மனதின் சாயை உன் மேல் படிவதால்தான். மனதை தூய்மைப்படுத்து. உன் பலவீனம் தானாக மறைந்து விடும்.
உங்கள் காதல் அமரத்துவம் அடையட்டும்.
போவதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானின்றி நீங்கள் இல்லை என்பதை மட்டும் எப்பொழுதும் மறக்க வேண்டாம்.
சரி. நான் வரட்டுமா?
மனமும் இதயமும் : (மரியாதையுடன்) எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவரே, நன்றி. தாங்கள் யார்?
யாரோ : நான்.... நான்..... நான்தான் உயிர்..... ஆன்மா.
உன் புல்லாங்குழல் எங்கே? - 3
காற்றில் தவழ்ந்து வரும் உன்னிசையால் உந்தப்பட்டு
மையிடவும் தலைபின்னவும் பட்டாடை உடுத்தவும் மறந்து
அலங்கோல நிலையில் நான் ஓடோடி வந்துனை காண
சிரித்துக் கொண்டே என் காதில் ஆடும் ஜிமிக்கியை ரசித்தபடி
என் குழலை ஒதுக்கி, அன்பு பொங்க என் கரம் பற்றி
அந்நிலவொளியில் என்னைக் கண்டதைத்தான் மறக்க முடியுமா?
அன்றொருநாள் தோழியருடன் அமர்ந்து சிரித்து மகிழும் நேரத்தில்
அவர்களுடன் காதல்மொழிதனை பேசியே உன் விழியால் என்னை அழைக்க
அங்கிருந்து தப்பித்து ஒரு சுனையின் அருகில் உனக்காக காத்திருந்த நேரம்
கலகலக்கும் கண்ணாடி வளையல்களை என் கைகளில் அடுக்கி
கண்ணீர் சிந்தும் என் கரம் பற்றியே அழகுப் புன்னகையுடன்
பட்டாம்பூச்சிகளை துரத்திய கணங்களைத்தான் மறக்க முடியுமா?
அனைவரும் படுத்துவிட்ட இரவு வேளையில் குயிலாய் கூவும்
உன் அழைப்பிதழை ஏற்று கள்ளத்தனத்துடன் உன்னை சந்திக்க நான் வர
என் கரம் பற்றி அமரச்செய்து மறைத்து வைத்திருந்த பொருளை வெளியே எடுத்து
அந்நிலவொளியில் என் கைகளில் சித்திரம் வரைய துவங்க
என்னதென்று பார்த்த என கண்களில் நீர், இதயத்தில் நிறைவு
எனக்கு மிகவும் பிடித்த மருதாணியை நீயிட்ட அந்நாளைத்தான் மறக்க முடியுமா?
உன்னை நினைத்தே பாறையில் அமர்ந்து கவிதை எழுதும் வேளையில்
பின்னிருந்து என் கண்மூடி பின்னலைப் பிடித்திழுத்து
செவிகளில் கலகலவென ஏதோவொன்றை ஒலிக்க செய்ய
கோபத்தில் அங்கிருந்து நடக்க எத்தனித்த என் கரம் பற்றி
கண்களால் மன்னிப்பு கோரி, என் கால்களில் கொலுசை அணிவிக்க
அங்கேயே அமர்ந்து மகிழ்ச்சியில் விம்மி விம்மி நான் அழுததைத்தான் மறக்க முடியுமா?
இதோ மூப்படைந்த நிலையிலும் ஒளிவீசும் நினைவுகளே
என் வாழ்க்கை துணையாக, வாழ்வை வண்ணமயமாக்க
அவ்வப்பொழுது என் இடுப்பில் செருகி வைத்திருக்கும்
உன் புல்லாங்குழல் எடுத்து நான் ஊதும் வேளையில்
நந்தவனத்து பறவைகளும் கறவைகளும் என்னை சூழ்கிறதே
இவ்வுலகமே சிலிர்க்கும் அளவு உரைப்பாய், ‘என் ராதையே குழலுக்கு இனியவள்’
மையிடவும் தலைபின்னவும் பட்டாடை உடுத்தவும் மறந்து
அலங்கோல நிலையில் நான் ஓடோடி வந்துனை காண
சிரித்துக் கொண்டே என் காதில் ஆடும் ஜிமிக்கியை ரசித்தபடி
என் குழலை ஒதுக்கி, அன்பு பொங்க என் கரம் பற்றி
அந்நிலவொளியில் என்னைக் கண்டதைத்தான் மறக்க முடியுமா?
அன்றொருநாள் தோழியருடன் அமர்ந்து சிரித்து மகிழும் நேரத்தில்
அவர்களுடன் காதல்மொழிதனை பேசியே உன் விழியால் என்னை அழைக்க
அங்கிருந்து தப்பித்து ஒரு சுனையின் அருகில் உனக்காக காத்திருந்த நேரம்
கலகலக்கும் கண்ணாடி வளையல்களை என் கைகளில் அடுக்கி
கண்ணீர் சிந்தும் என் கரம் பற்றியே அழகுப் புன்னகையுடன்
பட்டாம்பூச்சிகளை துரத்திய கணங்களைத்தான் மறக்க முடியுமா?
அனைவரும் படுத்துவிட்ட இரவு வேளையில் குயிலாய் கூவும்
உன் அழைப்பிதழை ஏற்று கள்ளத்தனத்துடன் உன்னை சந்திக்க நான் வர
என் கரம் பற்றி அமரச்செய்து மறைத்து வைத்திருந்த பொருளை வெளியே எடுத்து
அந்நிலவொளியில் என் கைகளில் சித்திரம் வரைய துவங்க
என்னதென்று பார்த்த என கண்களில் நீர், இதயத்தில் நிறைவு
எனக்கு மிகவும் பிடித்த மருதாணியை நீயிட்ட அந்நாளைத்தான் மறக்க முடியுமா?
உன்னை நினைத்தே பாறையில் அமர்ந்து கவிதை எழுதும் வேளையில்
பின்னிருந்து என் கண்மூடி பின்னலைப் பிடித்திழுத்து
செவிகளில் கலகலவென ஏதோவொன்றை ஒலிக்க செய்ய
கோபத்தில் அங்கிருந்து நடக்க எத்தனித்த என் கரம் பற்றி
கண்களால் மன்னிப்பு கோரி, என் கால்களில் கொலுசை அணிவிக்க
அங்கேயே அமர்ந்து மகிழ்ச்சியில் விம்மி விம்மி நான் அழுததைத்தான் மறக்க முடியுமா?
இதோ மூப்படைந்த நிலையிலும் ஒளிவீசும் நினைவுகளே
என் வாழ்க்கை துணையாக, வாழ்வை வண்ணமயமாக்க
அவ்வப்பொழுது என் இடுப்பில் செருகி வைத்திருக்கும்
உன் புல்லாங்குழல் எடுத்து நான் ஊதும் வேளையில்
நந்தவனத்து பறவைகளும் கறவைகளும் என்னை சூழ்கிறதே
இவ்வுலகமே சிலிர்க்கும் அளவு உரைப்பாய், ‘என் ராதையே குழலுக்கு இனியவள்’
உன் புல்லாங்குழல் எங்கே? - 2
ரத்தம் சதை உணவு மலம் அனைத்தையும்
தாங்கும் எலும்புகளை போர்த்திய தோல்
கண்ணாடியில் தெரியும் பொழுதெல்லாம்
பிரதிபலிக்கும் உருவம் என்னிடம் கேட்கிறது
உன் கண்ணன் காதலித்தது இதற்குதானா?
கூந்தலின் கருப்பு வெள்ளையையும்
அழுக்கைப் பற்றும் நகங்களையும் மறந்து
இளமையின் துள்ளலில் நீ என் கரம் பற்ற
உறைந்த அக்கணங்களே என்னிடம் கேட்கிறது
உன் கண்ணனின் காதல் இத்தனைதானா?
ருக்மிணியையும் சத்யபாமாவையும் சேர்த்து
பதினாறாயிரத்து எட்டு மனைவியரை
மணந்துகொண்டு சுகம் அனுபவிக்கும் உன்னைக் கண்ட
காற்று என்னிடம் ஏளனமாய் கேட்கிறது
உனக்கு பொறாமை ஏதேனும் உண்டா?
மனம் நிறைய ஆசைகளுடன் பாசம் சேர
பலவித எதிர்பார்ப்புகளுடன் அன்பு நடைபயில
இதயத்தை மோகமும் போகமும் கவ்வ
மனிதக்காதல் கண்சிமிட்டி என்னிடம் கேட்கிறது
உன் காதலுக்கு விலாசம் ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறேன், கூர்ந்து கேளுங்கள்
கண்ணாடியே, என் தோல் சுருங்கிவிடும்
காலமே, என் இளமை மறைந்துவிடும்
காற்றே, எனக்கு பொறாமை அவசியமில்லை
மனிதக்காதலே, விலாசம் எனக்கு தேவையில்லை
ஏனெனில்
ஐம்புலன்களையும் காப்பாற்றி, மனதில் அழுக்கை அகற்றி
புத்தியில் அகந்தையை நீக்கி, இதயத்தில் வீணையை மீட்டும்
எனக்கே எனக்காக தந்துவிட்ட உன் சப்தஸ்வர புல்லாங்குழல்
நீயின்றியே என் ஆன்மாவுடன் காதல் கானம் வாசிக்கிறதே
‘குழலுடையாள் என் ராதையே’ என்றே
உரக்க உரைப்பாய் உலகிற்கு
தாங்கும் எலும்புகளை போர்த்திய தோல்
கண்ணாடியில் தெரியும் பொழுதெல்லாம்
பிரதிபலிக்கும் உருவம் என்னிடம் கேட்கிறது
உன் கண்ணன் காதலித்தது இதற்குதானா?
கூந்தலின் கருப்பு வெள்ளையையும்
அழுக்கைப் பற்றும் நகங்களையும் மறந்து
இளமையின் துள்ளலில் நீ என் கரம் பற்ற
உறைந்த அக்கணங்களே என்னிடம் கேட்கிறது
உன் கண்ணனின் காதல் இத்தனைதானா?
ருக்மிணியையும் சத்யபாமாவையும் சேர்த்து
பதினாறாயிரத்து எட்டு மனைவியரை
மணந்துகொண்டு சுகம் அனுபவிக்கும் உன்னைக் கண்ட
காற்று என்னிடம் ஏளனமாய் கேட்கிறது
உனக்கு பொறாமை ஏதேனும் உண்டா?
மனம் நிறைய ஆசைகளுடன் பாசம் சேர
பலவித எதிர்பார்ப்புகளுடன் அன்பு நடைபயில
இதயத்தை மோகமும் போகமும் கவ்வ
மனிதக்காதல் கண்சிமிட்டி என்னிடம் கேட்கிறது
உன் காதலுக்கு விலாசம் ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறேன், கூர்ந்து கேளுங்கள்
கண்ணாடியே, என் தோல் சுருங்கிவிடும்
காலமே, என் இளமை மறைந்துவிடும்
காற்றே, எனக்கு பொறாமை அவசியமில்லை
மனிதக்காதலே, விலாசம் எனக்கு தேவையில்லை
ஏனெனில்
ஐம்புலன்களையும் காப்பாற்றி, மனதில் அழுக்கை அகற்றி
புத்தியில் அகந்தையை நீக்கி, இதயத்தில் வீணையை மீட்டும்
எனக்கே எனக்காக தந்துவிட்ட உன் சப்தஸ்வர புல்லாங்குழல்
நீயின்றியே என் ஆன்மாவுடன் காதல் கானம் வாசிக்கிறதே
‘குழலுடையாள் என் ராதையே’ என்றே
உரக்க உரைப்பாய் உலகிற்கு
உன் புல்லாங்குழல் எங்கே?
பொய்புரட்டுடன் வெண்ணெய் திருடி
பொய்யர்களை கொன்ற கொற்றவன் நீ
காலத்தை சிறிது நிறுத்திவைத்து
களியாட்டம் போட்ட கள்வன் நீ
கோகுலத்தை சொர்க்கமாய் மாற்றி
பூமகளை மகிழ்வித்த வித்தகன் நீ
கோபியர்களை பித்தர்களாய் மாற்றி
சித்தர்களையும் ஏங்கவைத்த மாதவன் நீ
பால்பற்கள் நடுவே அண்டத்தை
அன்னையிடம் காண்பித்த பாலகன் நீ
வரிசைப்பற்கள் தெரிய ஆசையாய்
என்னிடம் வழிந்த வாலிபன் நீ
சுவாசத்தை ஞானத்தால் கலந்து
புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணன் நீ
சிலையென சமைந்த பசுக்களும்
இலையுதிர்க்க மறந்த மரங்களுமானவன் நீ
மௌனத்தை சிரிப்பால் கிழித்து
இதயகானம் பாடிய கண்ணன் நீ
கற்றவைகளை சுத்தமாய் அழித்து
காதலை நிரப்பிய கண்ணையன் நீ
உன்னினைவால் வாடும் என்னை
உன்னிசையால் வருடும் காதலன் நீ
என்னைவிட்டு பிரிந்த வேளையிலும்
என்னகத்தில் நிறைந்துள்ள கருநீலன் நீ
இசைப்பாய் இசைப்பாய் என்றே
இவ்வுலகம் இறைஞ்சுகிறது உன்னிடம்
‘உன் புல்லாங்குழல் எங்கே’
என்றே தேடி அலைகிறது அகிலமும்
மயில்பீலியாட மனைவியர் காதுபட
அண்டமும் பணிவுடன் உன்னை நோக்க
பதில் சொல்வாய் தெளிவாய்
‘என் உயிரான ராதையிடம் அங்கே’
பொய்யர்களை கொன்ற கொற்றவன் நீ
காலத்தை சிறிது நிறுத்திவைத்து
களியாட்டம் போட்ட கள்வன் நீ
கோகுலத்தை சொர்க்கமாய் மாற்றி
பூமகளை மகிழ்வித்த வித்தகன் நீ
கோபியர்களை பித்தர்களாய் மாற்றி
சித்தர்களையும் ஏங்கவைத்த மாதவன் நீ
பால்பற்கள் நடுவே அண்டத்தை
அன்னையிடம் காண்பித்த பாலகன் நீ
வரிசைப்பற்கள் தெரிய ஆசையாய்
என்னிடம் வழிந்த வாலிபன் நீ
சுவாசத்தை ஞானத்தால் கலந்து
புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணன் நீ
சிலையென சமைந்த பசுக்களும்
இலையுதிர்க்க மறந்த மரங்களுமானவன் நீ
மௌனத்தை சிரிப்பால் கிழித்து
இதயகானம் பாடிய கண்ணன் நீ
கற்றவைகளை சுத்தமாய் அழித்து
காதலை நிரப்பிய கண்ணையன் நீ
உன்னினைவால் வாடும் என்னை
உன்னிசையால் வருடும் காதலன் நீ
என்னைவிட்டு பிரிந்த வேளையிலும்
என்னகத்தில் நிறைந்துள்ள கருநீலன் நீ
இசைப்பாய் இசைப்பாய் என்றே
இவ்வுலகம் இறைஞ்சுகிறது உன்னிடம்
‘உன் புல்லாங்குழல் எங்கே’
என்றே தேடி அலைகிறது அகிலமும்
மயில்பீலியாட மனைவியர் காதுபட
அண்டமும் பணிவுடன் உன்னை நோக்க
பதில் சொல்வாய் தெளிவாய்
‘என் உயிரான ராதையிடம் அங்கே’
Subscribe to:
Comments (Atom)