ரகசியமாய் என்னருகே வந்து சிரித்தவனே
ரகசியப் புன்னகைப் புரிந்து மயக்கியவனே
ரகசியமாய் மறைந்து என்னை மறந்தவனே
என் கண்ணீருக்கு விடையளிப்பாய் காதலனே
கவலையின்றி வெகுளியாய் சிரித்தவளே நான்
கவலையாய் உன்நலம் விசாரித்தவளே நான்
கவலையுடன் புலம்பி திரிபளும் நான்
காதலுடன் வாழும் ராதை நான்
காதலை என்னிதயத்தில் மலரச்செய்தவன் நீ
காதலனாய் என்னை விரும்பியவனும் நீ
காதல் இலக்கணம் கற்பித்தவனும் நீ
காதலை உதறிய கண்ணன் நீ
விழிகளால் வடித்த கவிதைகள்தான் எத்தனை
விழிகளோடு சேர்ந்த கணங்கள்தான் எத்தனை
விழிகள் உணர்த்திய காதல்தான் எத்தனை
என் கவிதைகளால் வடித்தவைதான் எத்தனை
எதையும் வேண்டி உன்னிடம் கெஞ்சியதில்லை
எதையும் தேவை என்று கேட்டதில்லை
எதையும் எனதே என்று கூறியதில்லை
என் இதயம் ஏனோ பொய்யுரைப்பதில்லை
மலராய் மணம்வீசி ஏன் வந்தாய்
மலரே என்றே ஏன் விளித்தாய்
மலர்மணம் புரியவே ஏனோ துடித்தாய்
என் வாழ்வில் ஏனோ நுழைந்தாய்
என்னை மறுத்து மறந்தது ஏன்
என்னை ஒதுக்கி துறந்தது ஏன்
என்னை துக்கங்களில் ஆழ்த்தியது ஏன்
என்னையும் காதலித்தது ஏன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமை..
ராதையாகவே மாறிவிட்ட பத்மா...
எதையும் வேண்டி உன்னிடம் கெஞ்சியதில்லை
எதையும் தேவை என்று கேட்டதில்லை
எதையும் எனதே என்று கூறியதில்லை
என் இதயம் ஏனோ பொய்யுரைப்பதில்லை
your love has no boundries padma...
Thank you very much.
Post a Comment