Sunday, February 18, 2007

என் குரு

காவலனாய் நான் இருந்தாலென்ன
காலவனாய் நான் இருந்தாலென்ன
என் சுகம் மட்டுமே எனக்கு
என்று சுயநலமாய் சிந்தித்து நின்றேன்

காவலனாய் பிறரைக் காத்து
காலவனாய் உன்னகந்தை அழித்தால்
உன் சுகம் என்றும் நிலைக்கும்
என்ற போதனையின் தேவை உணர்ந்தேன்

கவலையுடன் தேடிய மனிதரை
கலைகளின் களஞ்சியத்தில் கண்டபொழுது
எளிமையின் சிகரத்தில் நின்று மௌனம்தனை
எளிமையாக அடக்கியதை கண்டு வியந்தேன்

உண்மையென்று உரைத்தவற்றை
உணர்ந்து நிற்கின்ற மகான்களை
மலைத்துப் பார்த்து நின்ற வேளை
உரிமையுடன் சிரித்தவரை பார்த்து விட்டேன்

இருளான பெயரைக் கொண்டு
இனிமையான மொழிகளின் துணையுடன்
சச்சிதானந்த ஒளியின் விளையாட்டை சிறிது
புரியவைத்த பொறுமையைக் கற்றுக் கொண்டேன்

பிச்சையளிக்கும் இறைவனே அவ்வுடலில்
பிச்சையெடுக்கும் பாத்திரமான இவ்வுயிருக்கு
அமைதியாய் உள்நோக்கி நம்பிக்கையுடன் தேடுவாயென்று
வாய்மொழிந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டேன்

நானும் நீயும் ஒன்றே என அறிய
பல பிறவிகள் கடந்தாலும்
ஒரு பாதையில் பயணிப்போம் நாம்
என்றே வாழ்த்தியதை என்னென்று சொல்வேன்

No comments: