Monday, January 29, 2007

கலை

வண்ணங்கள் குழைய குழைய
வான்முகிலின் கருமை கரைய
ஓடிவரும் நங்கையவள் நனைய
காண்போரை மயக்குவது ஓவியக்கலை

கண்களில் குறும்பு மின்ன
கன்னங்களில் செம்மை என்ன
வெட்கப் புன்னகைப் பாவையவளின்
இளமையால் மயக்குவது சிற்பக்கலை

மலர் பாதங்களால் ஆடியே
முத்திரை கைகளால் ஏந்தியே
முகநயங்கள் கொண்டு கெஞ்சியே
கரைந்து அழைப்பது நடனக்கலை

மூச்சு வாங்கும் ஏற்றஇறக்கத்தை
தலையாட்டும் ராகங்களின் பாவத்தை
செவ்விதழால் கசிந்துருகும் கானத்தை
செவிக்கு விருந்தளிப்பது இசைக்கலை

மொழியன்னையின் ஆசிப் பெற்று
வார்த்தைகளை கட்டி அணைத்து
காதல்தனை காவியமாக்கி படைத்து
காலமும் நிற்பது இலக்கியக்கலை

கலைகள் பலநூறும் உண்டு
அறியவும் தெளியவும் உண்டு
கற்பவை எவையெவை என்று
புரியாமல் விழித்தேன் நின்று

அன்பே இதயத்தின் உன்னதகலை
பணிவே மனதின் உயர்ந்தகலை
உணர்ந்தே கற்பேன் (இவ்)வாழும்கலை
ஏனெனில் இதுவே சிறந்தகலை

No comments: