இறைவனை அருவமாய் வழிபடுவது என்பது சாதாரண மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்பதால், அந்த ஜோதி வடிவான பரம்பொருளை பலர் பலவிதமான பாவங்களை உணர்வுகளைக் கொண்டு உணர்ந்து இன்புறுகின்றனர். அந்த பரமாத்மனுடன் அம்மையாய், அப்பனாய், சகோதரனாய், தோழனாய், குழந்தையாய், குருவாய், கணவனாய், காதலனாய், காதலியாய் நெருங்கிய உறவு கொண்டு ஆத்ம ஞானத்தை அடைபவர் பலர்.
இந்த பாவங்கள் தொன்றுதொட்டு வருபவை. உதாரணத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனை அன்னையின் வடிவில் பார்த்தார். அவருடைய சீடரான விவேகானந்தரோ சிவன் என்றாலே உருகி விடுவார். மத்வர் விரும்பியது பால கண்ணனை. ஆஞ்சநேயரோ தாச பாவத்தில் தன்னை நிறுத்தி நினைத்து ராம நாமத்தை மட்டும் உச்சரித்தவர். இப்படி அவரவர் மனநிலைப்படி அந்தந்த உறவாய் இறைவனுடன் ஒன்றிவிடுகின்றனர்.
நம் பாரதியார் பலவித பாவங்களை அழகாய் கையாண்டுள்ளார் என்பது உலகறிந்த உண்மை. இப்பாவங்களை அவர் கையாண்டுள்ள விதம் மிக மிக அழகு என்று கூறுவதற்கு கூட எனக்கு தகுதியில்லை. அவர் பின்னே வந்தவர்களிடம் அந்த எழுத்துக்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும். என் கிறுக்கல்களிலும் இருக்கிறது என்று நீங்கள் கூறினால் அது உங்கள் பெருந்தன்மையேயாகும்.
இருப்பினும் பாவங்களை மட்டும் கருத்தில் கொண்டு ஏதோ எனக்கு தெரிந்த கோணத்தில் கிறுக்குகிறேன். கண்ணன் என்னை மன்னிப்பானாக. இனி மேலே.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment