Sunday, February 17, 2008

தண்ணீர் சிரிப்பு



மத்தியான வெயிலு சுள்ளுனு வந்துச்சு
மட்ராஸ் தண்ணியும் குழாயில கொட்டுச்சு
மசமசன்னு உட்காற்ர பழக்கம் விட்டுபோச்சு
மடிச்சுகட்டிய சேலயோட ஓடிவர வேண்டியதாச்சு

தண்ணியடிக்கிற புருசன் உதவி செய்யறதில்ல
தண்ணிதூக்க என்னத் தவிர நாதியில்ல
தன்னந்தனியா குடத்த தூக்கி வந்தேனுல்ல
தன்னிலை மறந்த குடங்கள் நிறைய நிக்குதுல்ல

போட்டி போட இங்கதான் ஆளில்ல
பேச்சுல அடிச்சுக்குற கூட்டம் இன்னிக்குல்ல
பேசாத பிள்ளையாருக்கு நன்றி சொன்னேனுல்ல
போகும் போது மனசவிட்டு சிரிச்சேனுல்ல

ஓடியாங்க ஓடியாங்க இங்க ஓடியாங்க
ஓயாம கொட்டுற தண்ணிய புடிச்சுக்கோங்க
ஓசைவருது குழாயெங்கேன்னு கேக்காம வந்துடுங்க
ஓவியம் பின்னாடி இருக்குறத பாத்துடுங்க

1 comment:

Latha said...

Kavidhai summa sokka keedhu Padmaja! Enna Madras baashai try pannineengala? Great stuff! Nice poem for the picture! You are trying something innovative every time I guess!