Sunday, February 17, 2008

வம்பான தோசை



ஏண்டி, கறுப்பாயி
புள்ள குட்டி சௌக்கியமா?
வயலாண்ட நாளைக்கு போறப்ப
எங்கிட்ட சொல்லிட்டு போ
நம்ம ரோசா இருக்கால்ல
அன்னிக்கு எங்கிட்ட வந்து
என் தோட்ட கொஞ்சம்
இரவலுக்கு கேட்டா
ஏதோ விசேசம் போகணுமாம்
அவகிட்ட குடுத்துடு சரியா
ஆனா கறாரா சொல்லிபுடு
மூணு நாள்ல திருப்பி குடுக்கணும்னு

ஆமா, கேக்கணும்னு நெனச்சேன்
உங்க பக்கத்து வீட்டு பொண்ணு
ஓடிப் போயி கண்ணாலம் கட்டுச்சே
அது திரும்பி வந்துடுச்சாமே
நீ அத பாத்தியா
தனியா வந்துருக்கா
இல்ல அவனோடவா
இந்த கடய வுட்டு எங்க என்னால
போயி இதெல்லாம் பாக்க முடியுது
சரி சரி இந்தா இன்னும் ஒரு தோச சாப்பிடு

:D :D :D

2 comments:

Latha said...

Oh! A gossip session? Well portrayed! Good one!

Raj Arumugam said...

Padmaja - Absolutely delightful!
The language is so naturalistic and I could feel being in the situation. Fabulous.