Sunday, February 17, 2008

இரயில் பயணங்களில்...

தடதடவென ஓடும் ரயிலின் வேகத்தில்
நெடுநெடுவென வளர்ந்த மரங்கள் ஓட
சிலுசிலுத்த காற்றின் தாக்கத்தால் சீக்கிரமே
கலகலவென சிரித்த குழந்தைகள் தூங்க
வளவளவென பேசும் பயணிகள் மத்தியில்
நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டே
படபடவென பொரிந்து தள்ளிய ஒருவர்
மளமளவென ஊற்றெடுத்த மனைவியின் கண்ணீரால்
கசகசக்கும் அம்மதிய வேளையில் எரிச்சலடைந்து
கடகடவென பெட்டிகளின் ஆட்டத்தில் எழுந்து
மசமசவென்று நின்றிருந்தவர்களை கடந்து வந்தவர்
வெடவெடத்த மனைவியின் தவிப்பை உணராது
கணகணக்கும் மனதின் பலவீன உந்துதலால்
நமநமக்கும் வாயை உற்சாகப்படுத்த விரும்பி
சரசரவென்று இரண்டு இழுப்பு புகைவிட்டு
தகதகத்த கோபம் சிறிது அடங்க
விடுவிடுவென தன்னிடம் சென்று அமர்ந்து
திருதிருவென முழித்தவளைக் கண்டு சிரிக்க
பரபரத்து வேகமாய் உணவை பரிமாறினாள்

3 comments:

Latha said...

Wow! What a coinage of words! This can be a very good lyrics for any movie. This is really interesting and will be great with a good tune!

Anonymous said...

really nice lyrics...... keep it up.... padithuvittu comments write pannamal pogamudiyavillai....

good

Padmaja said...

Thanks Kavitha. Glad that you liked the poem.