Sunday, February 17, 2008

சிறை



தேசியக் கொடியிலே கண்ட வண்ணங்கள்
பாதைக் கம்பியிலும் காண நேர்கிறதே
காற்றில் பறக்கும் கட்சி சின்னங்கள்
மக்கள் மத்தியில் துவள நேர்கிறதே

மொழிகள் பல உண்டிங்கு நாட்டிலே
பேசியே காலம் உருள நேர்கிறதே
வசதியும் பதவியும் உண்டிங்கு நாட்டிலே
மக்கள் மோகத்தில் அழியவும் நேர்கிறதே

அன்னையிடம் சிறையிருந்த காலத்திலே
சுவாசிக்க இவ்வுலகை காண நேர்ந்ததே
மண்ணைவிட்டு பறந்துவிட்ட நேரத்திலும்
சிறையாய் இவ்வுலகில் இருக்க நேர்கிறதே

கையில்லா சிலையாய் அரணுள் நின்றே
பூசையும் மணியாரங்களும் ஏற்க நேர்கிறதே
சிகரமாய் உயிருடன் இருந்த காரணத்தாலோ
பட்டாசாய் என்னுடல் பொசுங்கவும் நேர்ந்ததே

1 comment:

Latha said...

Very meaningful verses Padmaja! Let me tell you - you are an all rounder! You lay hands on all kinds of subjects. Great stuff Padmaja! Keep it up!