
ஒளிவீசும் பட்டில்லை
மயக்கும் பகட்டில்லை
பிறர்கை பகடையில்லை
வாழ்விலோ பற்றில்லை
கண்களில் காதலுண்டு
கண்ணன் பக்தியுண்டு
கருணையுடன் அணைப்பதுண்டு
கள்ளமின்றி சிரிப்பதுண்டு
பாதகங்கள் மருண்டதுவே
பாவங்கள் மறைந்ததுவே
பாமாலை மலர்ந்ததுவே
பாதங்கள் மகிழ்ந்ததுவே
துக்கம் எமக்கில்லை
துகிலோ தேவையில்லை
துணையின் அவசியமில்லை
துண்டாடும் பார்வையில்லை
கண்ணன் பரதம் எம் நெற்றியில்
கண்ணன் அன்பு எம் கழுத்தில்
கண்ணன் நாமம் எம் நெஞ்சில்
கண்ணன் சேவை எம் கையில்
அன்பின் ஆழம் அவனல்லவா
அகிலம் அவனின் விளையாட்டல்லவா
அனுபவம் அவனின் ஆசிர்வாதமல்லவா
அவனும் நீயும் ஒன்றல்லவா
1 comment:
Nice poem! You have brought your favourite God into the picture. That makes it even more interesting! Good stuff!
Post a Comment