பட்டணம் வந்து சேந்த பொறவு
பட்டாளம் சேர போனேனே
பணத்த சேத்து காத்துகிட்டா
சிங்காரியோட இருப்பேனே
ஓடி ஓடி உழைச்சாலுமே
உடம்பு வலி தெரியலியே
எங்கண்ணுக்குள்ள வாரவள
நெனச்சு மனசு தாங்கலியே
ஆத்தா பின்னே ஒளிஞ்சு நின்னு
நீ முழிச்சு பாத்த பார்வையில
அத்தான் நானேன்னு ஏத்துகிட்டு
வெக்கப்பட்ட சிவத்தபுள்ள
எம்.சி.ஆரு படத்தப் பாத்துபுட்டு
துள்ளி குதிச்ச என் செல்லம்மா
குருவிங்களோட ஓடுனயே
என் கண்ணான கண்ணம்மா
பச்சப்புடவ கொசுவம் கட்டி
பாட்டு கேட்ட வெகுளிப்புள்ள
பட்டு பட்டுன்னு பேசிபேசி
பட்டாசா பொரிஞ்ச புள்ள
கலங்கி குலுங்கி அழுதநேரம்
என் நெஞ்சுக்குள்ள வேகுதடி
உன்ன விட்டு பிரிஞ்ச சோகம்
சுண்ணாம்பா எரிக்குதடி
நீ சிரிச்ச சிரிப்பு எங்காதுக்குள்ள
சுத்தி சுத்தி போகுதடி
கண்ண மூடி நா படுக்கயில
கண்ணீரத்தான் சிந்துதடி
ஒசரமான உன் நெனப்பு
வந்து வந்து போகுதடி
உன் சாந்து பொட்டு மொகத்த காண
நெஞ்சு ஏனோ ஏங்குதடி
கேள்வி ஒன்னு மனசுக்குள்ள
உம் மாமனத்தான் நினக்கிறியோ
வெவரம் புரியாத அழகுபொண்ணே
எனக்காகவே நீ காத்திருப்பியோ
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Dear kavithayini,
Unnudaiya anaithu kavidhaigalilum oru melliya sogam ilaiyodugarithe. Irubadhu vayathil pidithavai edhuvum arubadhu vayadhil anniyamam therigiadhu. Innum urchagamana kavithaigal thevai.
Post a Comment