ரோசா நானு ராசா நீயின்னு
சொல்லி சொல்லி மாஞ்சியேடா
என் கன்னங்குழி மயக்கத்தில
சொக்கி போயி நின்னயேடா
தலல குட்டி கவித படிச்ச
மொழி தெரியாம நா முழிக்கயில
கஞ்சி தண்ணி ஊத்தினயே
நா சுரம் வந்து அனத்தயில
சோறு தண்ணி இறங்காம
நானு இங்க தவிக்கேனே
பொங்கி போட நானொருத்தி
காத்து காத்து நிக்கேனே
கொஞ்ச கெஞ்ச நா இருக்க
வேற புள்ள நெனச்சீயோ
கண்ணீருல நாந்தவிக்க
கை கழுவி விட்டீயோ
வெட்டிப் பேச்சு பேசுரேன்னு
வெட்டிவிட்டு போயிட்டீயோ
அன்பு காட்ட நாயிருக்க
வேற அன்பதான் கண்டீயோ
கோபமில்ல நீ என் உசிரு இல்ல
சேதி சொல்ல தோழியில்ல
மூஞ்சி தூக்க மனசில்ல
நீயும் இங்க வருகயில
பொங்கல் வர போகுதய்யா
உன் முகத்த எனக்கு காட்டுவியா
கண்ணாலம் கட்ட மனசில்லயா
இல்ல என்னத்தான் பிடிக்கலயா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment