Saturday, December 02, 2006

என் கவிதை

மயிலாய் ஒயிலாய் நடந்து
மணலாய் வெறுமையாய் விரிந்து
மலையாய் மெளனமாய் நின்று
மழையாய் அழகாய் பொழிந்து
மலராய் மணமாய் கமழ்ந்து
மரமாய் பசுமையாய் சிலிர்த்து
மணியாய் அருமையாய் சிரித்து
மகவாய் மிகவாய் மகிழ்ந்து
மகிழும் இளமை இயற்கையே

கல்லாய் கனியாய் இறுகி
கன்றாய் கண்ணீராய் தவித்து
காற்றாய் சடுதியில் கலந்து
கயிலையில் பனியாய் உறைந்த
கடவுளாய் காட்சி தந்தாலும்
கண்கொண்டு காண முடியாமல்
களிப்புடன் ஒளிந்தே விளையாடும்
கண்ணனாம் உன்னையே நினைத்து
காத்திருக்கும் தருணங்களில் தேடலில்
கவிதையாய் எழுதிய இவ்வரிகளே
கண்சிமிட்டி கைகொட்டி என்னைக்
கண்டே ஏளனமாய் சிரிக்கின்றனவோ

No comments: