மயிலாய் ஒயிலாய் நடந்து
மணலாய் வெறுமையாய் விரிந்து
மலையாய் மெளனமாய் நின்று
மழையாய் அழகாய் பொழிந்து
மலராய் மணமாய் கமழ்ந்து
மரமாய் பசுமையாய் சிலிர்த்து
மணியாய் அருமையாய் சிரித்து
மகவாய் மிகவாய் மகிழ்ந்து
மகிழும் இளமை இயற்கையே
கல்லாய் கனியாய் இறுகி
கன்றாய் கண்ணீராய் தவித்து
காற்றாய் சடுதியில் கலந்து
கயிலையில் பனியாய் உறைந்த
கடவுளாய் காட்சி தந்தாலும்
கண்கொண்டு காண முடியாமல்
களிப்புடன் ஒளிந்தே விளையாடும்
கண்ணனாம் உன்னையே நினைத்து
காத்திருக்கும் தருணங்களில் தேடலில்
கவிதையாய் எழுதிய இவ்வரிகளே
கண்சிமிட்டி கைகொட்டி என்னைக்
கண்டே ஏளனமாய் சிரிக்கின்றனவோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment