புன்னகைப் பூத்த வானம்
பூப்பூவாய் வெண் மலர்களை
பூரித்து தூவ வேண்டியே
பூமியின் இறைஞ்சலை ஏற்று
மேகமாய் மிதக்கும் சிசுக்களை
வேகமாய் கனிவுடன் அழைத்து
கருநிறம் பூசிய கர்ப்பிணியாய்
வேடமிட்டு சிரிக்க வைத்தானாம்
உடல் குலுங்க சிரித்தவுடன்
தண்ணீர் குழந்தைகளாய் தூவிய
மழைத் துளிகளை அகப்படுத்தி
மனமகிழ்ந்து மணம் பரப்பி
சலங்கை கட்டிய நாட்டியத்தின்
அபிநய சந்தத்தின் சத்தத்துடன்
ஆட வைத்தே நெகிழ்ந்தாளாம்
பூமி என்னும் அன்னை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment