Saturday, December 02, 2006

மழை

புன்னகைப் பூத்த வானம்
பூப்பூவாய் வெண் மலர்களை
பூரித்து தூவ வேண்டியே
பூமியின் இறைஞ்சலை ஏற்று
மேகமாய் மிதக்கும் சிசுக்களை
வேகமாய் கனிவுடன் அழைத்து
கருநிறம் பூசிய கர்ப்பிணியாய்
வேடமிட்டு சிரிக்க வைத்தானாம்

உடல் குலுங்க சிரித்தவுடன்
தண்ணீர் குழந்தைகளாய் தூவிய
மழைத் துளிகளை அகப்படுத்தி
மனமகிழ்ந்து மணம் பரப்பி
சலங்கை கட்டிய நாட்டியத்தின்
அபிநய சந்தத்தின் சத்தத்துடன்
ஆட வைத்தே நெகிழ்ந்தாளாம்
பூமி என்னும் அன்னை

No comments: