Friday, November 03, 2006

என் குரல் கேட்பாய் கண்ணா


கோகுலத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
பல மனைகளில் அழையாமல் நுழைந்து
குறும்பு செய்தே களைத்துப் போய்
என் கழுத்தைகட்டி உணவு உண்டு
அந்தி பொழுதின் குளிர்ந்த கவர்ச்சியில்
என் மடியில் படுத்து சிரித்துக்கொண்டே
மெல்லிய குரலில் வருடிச் செல்லும்
என் ஆராரோ இசையில் நீயும் மயங்கியே
விளையாடி களைத்த உடல் இறைஞ்ச
உன் கேசத்தை இதமாய் கோதிவிடும்
என் கையை பிடித்த உன் பிஞ்சுக்கரங்கள்
ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் சிறிது
கண்மூடி உவகையுடன் உலகம் மறந்து
தூங்கும் வேளையில் என் கண்கள்
உன் கருநீல அழகுமுகம் கண்டு
லயித்துப் போன பெருமை நெஞ்சுடன்
கண்திருஷ்டி கழிக்க இறைவனை வேண்டி
உன் குறும்பில் நானும் பொறுமை இழந்து
உன்னைத் திட்டிய கணங்களை நினைத்தே
உன் பாதம் எடுத்து என் கண்ணில் ஒற்றி
அதன் மென்மையில் கரைந்து கண்ணீர்விட
வெண்ணெய் திருடும் கயவனின் தாயே
என்றே அனைவரும் என்னை இகழ்ந்தாலும்
ஒருகணமும் உன்னைவிட்டு பிரிய மனமின்றி
அணைத்து அரவணைத்து அன்புடன் காப்பாற்றவே
துடிப்பவள் இந்த பேதை என்பதை
புரிந்து கொள்வாயோ என் செல்ல மகனே

No comments: