Saturday, November 25, 2006

மெளனம்

அலையென முழங்கும் எண்ணங்களில்
என்னை உணர்ந்த தருணங்களில்
இருளான பாதையில் நுழைகையில்
அறிந்தேன் நான் ஆசையின் பிடியில்

அமர்ந்தேன் முகப்பில் பொறுமையுடன்
கேட்டேன் காலடிச்சத்தம் கவனமுடன்
எழுந்தேன் கொல்வதென்ற முடிவுடன்
இல்லையெனில் வாழவிடுமா அமைதியுடன்

எண்ணமெனும் ரம்பையின் நாட்டியத்தில்
என்னையே இழக்கவிருந்த நேரத்தில்
உண்மையை புரிந்துகொண்ட சிலிர்ப்பில்
வேரோடு பிடித்தேன் அதை தியானத்தில்

ஆசைகள் கால்பிடித்து கெஞ்சினவோ
எண்ணங்கள் கதவைதட்டி நுழைந்தனவோ
பலவித செருக்கையும் அழித்தனவோ
என்சிரிப்பில் கள்ளமனைத்தும் அழிந்தனவோ

எனக்கென வரலாறு ஏதுமில்லை
விதியென பேசுவதில் அர்த்தமில்லை
ஆசான் நானே வேறு யாருமில்லை
மெளனமே என்றென்றும் எந்நிலை

காண்பவை மெளனத்தின் வெளிபாடே
எண்ணங்கள் மெளனத்தின் வெளிபாடே
ஆனால் மெளனம் அனைத்தையும் தாண்டியநிலை
ஏனெனில் மெளனமே ஆத்மனின் நிலை

No comments: