அலையென முழங்கும் எண்ணங்களில்
என்னை உணர்ந்த தருணங்களில்
இருளான பாதையில் நுழைகையில்
அறிந்தேன் நான் ஆசையின் பிடியில்
அமர்ந்தேன் முகப்பில் பொறுமையுடன்
கேட்டேன் காலடிச்சத்தம் கவனமுடன்
எழுந்தேன் கொல்வதென்ற முடிவுடன்
இல்லையெனில் வாழவிடுமா அமைதியுடன்
எண்ணமெனும் ரம்பையின் நாட்டியத்தில்
என்னையே இழக்கவிருந்த நேரத்தில்
உண்மையை புரிந்துகொண்ட சிலிர்ப்பில்
வேரோடு பிடித்தேன் அதை தியானத்தில்
ஆசைகள் கால்பிடித்து கெஞ்சினவோ
எண்ணங்கள் கதவைதட்டி நுழைந்தனவோ
பலவித செருக்கையும் அழித்தனவோ
என்சிரிப்பில் கள்ளமனைத்தும் அழிந்தனவோ
எனக்கென வரலாறு ஏதுமில்லை
விதியென பேசுவதில் அர்த்தமில்லை
ஆசான் நானே வேறு யாருமில்லை
மெளனமே என்றென்றும் எந்நிலை
காண்பவை மெளனத்தின் வெளிபாடே
எண்ணங்கள் மெளனத்தின் வெளிபாடே
ஆனால் மெளனம் அனைத்தையும் தாண்டியநிலை
ஏனெனில் மெளனமே ஆத்மனின் நிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment