கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்ப்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயக்கமில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Mandaiyil Sarakku irundhum, manda ganam ondrum illai.
Good one Padmaja!
Post a Comment