Sunday, September 24, 2006

சிட்டுக்குருவியே…


அழகான உன்னை வருடவே நினைத்தேன்
படபடக்கும் சிறகுகளைக் கண்டே மயங்கினேன்
அந்த சின்ன அலகின் அழகினிலே கரைந்தேன்
உன் கூட்டையும் சிறிது காணவே விழைந்தேன்

உன்னை அன்புடன் அணைக்கவே வேண்டினேன்
நிலை கொள்ளாமல் தவிக்கும் உன் குணத்தால் வியந்தேன்
உன் குரலின் இனிமையிலே நானும் நனைந்தேன்
நீ சிரிப்பாயோ என்று அறியவே நெருங்கினேன்

பறப்பது உன் உரிமை என்று பெருமிதமடைந்தாயா
விண்ணில் வரைந்த மேகக்கூட்டங்களைதான் பார்த்தாயா
அதை உன்னால் தொட முடியவில்லையே என்று ஏங்கினாயா
இருப்பினும் வாழ்வின் ராகங்களை அமைதியாய் ஏற்றாயா

பல கவிஞர்களை மயக்கும் உன் பெருமையை அறிவாயோ
அகிலமும் உன் கையிலே என்பதை உணர்வாயோ
அன்றாட அலுவல்களை உணர்ந்தேதான் செய்வாயோ
என் அருகாமையையும் ஏற்று சிறிது மகிழ்வாயோ

No comments: