Monday, January 29, 2007

காதலும் காதலும்

மார்கழித் திங்களில் ஒருநாள்
அதிகாலை விடியலில் எழுந்தாள்
புள்ளிமானாய் துள்ளி நடந்தாள்
புள்ளி வைத்தே கோலமிட்டாள்
அவனையும் அன்றே கண்டாள்

மௌனமே தாய்மொழி ஆனதோ
கண்களே கவிதைதனை வடித்ததோ
தனிமையே உற்ற துணையானதோ
கிறுக்கல்களே வடிகாலும் ஆனதோ
நெஞ்சமும் அதிர்ந்தே ஏங்கியதோ

அவளை இதயத்தில் வைத்தான்
நிலவை அவளுடன் ரசித்தான்
காற்றை அவளாய் சுவாசித்தான்
பிரிவை வலியாய் உணர்ந்தான்
இரவை கனவில் கழித்தான்

கண்டதால் உணவும் கசந்ததோ
காரணத்தால் காதலும் முறிந்ததோ
ஏக்கத்தால் பணியும் நின்றதோ
கண்ணீரால் மனதை நனைத்ததோ
காணாமல் காலமும் போனதோ

முதுமையில் புள்ளியாய் நின்றாள்
இளமையான அவனை நினைத்தாள்
ஓய்ந்தே நினைவுகளில் சென்றான்
அழகான அவளைமட்டும் கண்டான்

ஒருமுறை வருடிய காதலை
மறந்தும் நெஞ்சம் மறக்குமோ
பிரிவால் துடித்தாலும் சாதலை
காதலும் என்னாளும் ஏற்குமோ

No comments: