சிசுவாய் நான் ஜனிக்க
தாயாய் என்னைக் காத்தாய்
இயலாமையில் உன்னை நோக்க
பெருமையில் மனம் குளிர்ந்தாய்
பொறுமையின்றி நான் கதற
பொறுப்புடன் என்னை கவனித்தாய்
காலம் வேகமாய் உருண்டோட
காலனை கண்டுவிட்டு வந்தாய்
அன்று தாயாய் உன் கண்களில் அன்பு
சேயாய் என் கண்களில் கண்ணீர்
இன்று தாயாய் என் கண்களில் கண்ணீர்
சேயாய் உன் கண்களில் நன்றி
அன்று உன் அரவணைப்பில் நான்
இன்று என் அரவணைப்பில் நீ
அன்று உன் குழந்தையாய் நான்
இன்று என் குழந்தையாய் நீ
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment