வண்ணங்கள் குழைய குழைய
வான்முகிலின் கருமை கரைய
ஓடிவரும் நங்கையவள் நனைய
காண்போரை மயக்குவது ஓவியக்கலை
கண்களில் குறும்பு மின்ன
கன்னங்களில் செம்மை என்ன
வெட்கப் புன்னகைப் பாவையவளின்
இளமையால் மயக்குவது சிற்பக்கலை
மலர் பாதங்களால் ஆடியே
முத்திரை கைகளால் ஏந்தியே
முகநயங்கள் கொண்டு கெஞ்சியே
கரைந்து அழைப்பது நடனக்கலை
மூச்சு வாங்கும் ஏற்றஇறக்கத்தை
தலையாட்டும் ராகங்களின் பாவத்தை
செவ்விதழால் கசிந்துருகும் கானத்தை
செவிக்கு விருந்தளிப்பது இசைக்கலை
மொழியன்னையின் ஆசிப் பெற்று
வார்த்தைகளை கட்டி அணைத்து
காதல்தனை காவியமாக்கி படைத்து
காலமும் நிற்பது இலக்கியக்கலை
கலைகள் பலநூறும் உண்டு
அறியவும் தெளியவும் உண்டு
கற்பவை எவையெவை என்று
புரியாமல் விழித்தேன் நின்று
அன்பே இதயத்தின் உன்னதகலை
பணிவே மனதின் உயர்ந்தகலை
உணர்ந்தே கற்பேன் (இவ்)வாழும்கலை
ஏனெனில் இதுவே சிறந்தகலை
Monday, January 29, 2007
மனமும் இதயமும் – உரையாடல் இரண்டு
[கவிஞனைச் சுற்றி பழைய கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க பலவித நினைவுகள் அவனை ஆக்கிரமிக்கின்றன. அச்சூழலில் இரு குரல்கள் உரையாடுகின்றன. நினைவுகளில் தவிக்கும் கவிஞன் ஆச்சரியத்தில் கண்ணை மூடி கேட்கத் துவங்குகிறான். வாருங்கள் நாமும் கேட்போம்....]
வணக்கம், இதயமே!
வணக்கம், மனமே!
என்ன வெகு நாட்களாக உன்னைக் காணவில்லையே?
நான் இங்குதானே இருக்கிறேன்.
நான் உன்னைப் பார்க்கவில்லையே
உனக்கு ஆயிரம் சிந்தனைகள் அல்லவா
பார்! எடுத்தவுடனேயே என்னைத் இப்படி தாக்குகிறாயே. சரி, உன் நிலைமை எப்படி?
எனக்கென்ன ஆயிற்று?
உன் வலியைப் பற்றிக் கேட்கிறேன்
எந்த வலி?
உன் எழுத்தை நிறுத்தி வைத்த வலி?
சில வலிகள் மறைவதில்லை
பின்னே எழுத ஆரம்பித்து விட்டாயா?
ஆம்
எப்பொழுதிலிருந்து?
சில மாதங்களுக்கு முன்
அப்படியா! ஏன் இந்த முடிவு?
சில நேரங்களில் வலியால் நான் வலுவடைகிறேன்
நல்ல முதிர்ச்சி உன் பார்வையில்?
நன்றி.
வலியைத் தருவது யார் என்று புரிந்ததா?
ஓரளவு
யார்? உறவுகள் தானே?
இல்லை. சாட்சாத் நானேதான்.
என்ன?
உண்மைதான்
நம்ப முடியவில்லை. எப்படி சொல்கிறாய்?
என் எதிர்ப்பார்ப்புகள் என்னை ஏமாற்றும் போது வலியை அனுபவிக்கிறேன்
எங்கிருந்து பெற்றாய் இத்தனை ஞானத்தை?
தனிமையில் ஒர் அலசல். அவ்வளவுதான்
ஆன்மீகத்தில் நாட்டம் வந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்
எதை ஆன்மீகம் என்கிறாய்?
இவ்வாறு தத்துவம் பேசுவதும் தன்னையே அலசுவதும்
அதற்கு பெயர் ஆன்மீகம் என்று கூறினால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
உனக்கு வேறு என்னத் தெரியும்?
ஒன்றும் தெரியாது
நீ எப்பொழுதும் அடக்கம்தான். சரி, பழையக் கேள்விக்கே வருகிறேன். உறவுகளைப் பற்றி உன் கருத்து...?
அன்பினால் அனைவரும் உறவினர்களே
ஆஹா.... அருமை. ஆனால் அதே உறவுகளால் நீ கிழிபடும் போது?
நான் அவர்களை மனதாலும் திருப்பி கிழிக்காமல் பார்த்துக் கொள்ள முயல்கிறேன்
நீ ஜடமோ?
இல்லை. உணர்வுகள் நிறைய உண்டு
வஞ்சம் தீர்க்க மாட்டாயோ?
வருத்தமும் வலியும் மட்டும் நிறைய எஞ்சி நிற்கும். அதை கவனத்துடன் கையாள வேண்டும்
அதை மறக்க நினைப்பாயோ?
எதற்கு மறக்க வேண்டும்
உனக்கு கோபம் வராதோ?
என்னை அதற்குள் ஞானியாக்கிவிட்டாயே, மனமே
யாரிடம் இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?
என் அனுபவங்கள்
எதையாவது சாதிக்க விருப்பமுண்டா?
உண்டே
அப்பாடா உனக்கும் ஆசை உண்டு என்றதும் தான் நிம்மதி அடைந்தேன். அப்படி என்ன ஆசை, இதயமே?
நிகழ்காலத்தில் மட்டும் வாழ ஆசை
உன்னைப் போய் கேட்டேனே! உன்னைப் பற்றி ஒரு வரியில் சொல்லேன்
நான் ஒரு பிறவிக் காதலி
யாரைக் காதலிக்கிறாய்?
கண்ணனை
அப்படியெனில் என்னை ஏற்றுக் கொள்ளுமாறு உன்னிடம் வைத்த விண்ணப்பம் என்னவாயிற்று?
நான் மறந்ததாக கூறவில்லையே.
பிறகு உன் காதல்........?
உன் ஆன்மாவில் என் கண்ணனைக் காண்கிறேன். அது சரி. ஏன் நீ தெளிந்து விட்டாயா?
மன்னித்துவிடு. உன் தெளிவு என்னிடம் இல்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லேன்?
ஒன்றும் செய்யாதே
புரியவில்லை
வருவதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள். புரிந்து கொள்வாய்
சரி, முயல்கிறேன். அது வரை எனக்காக காத்திருப்பாயா, இதயமே?
நிச்சயம். கொடுத்த வாக்கை நான் என்றும் தவற விடுவதில்லை
நான் தடம் புரண்டாலும் என்னை அரவணைப்பாயா?
நிச்சயமாக
உன் சந்திப்பினால் தூய்மையடைந்தேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி, மனமே
உன் நினைவுடன் என்றும் நான்
நானும் அப்படியே
[இந்த உரையாடலுக்கு பின் கவிஞன் வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும் அமைதியாய் மீண்டும் தன் பெட்டியில் பத்திரமாக எடுத்து வைத்தான்]
வணக்கம், இதயமே!
வணக்கம், மனமே!
என்ன வெகு நாட்களாக உன்னைக் காணவில்லையே?
நான் இங்குதானே இருக்கிறேன்.
நான் உன்னைப் பார்க்கவில்லையே
உனக்கு ஆயிரம் சிந்தனைகள் அல்லவா
பார்! எடுத்தவுடனேயே என்னைத் இப்படி தாக்குகிறாயே. சரி, உன் நிலைமை எப்படி?
எனக்கென்ன ஆயிற்று?
உன் வலியைப் பற்றிக் கேட்கிறேன்
எந்த வலி?
உன் எழுத்தை நிறுத்தி வைத்த வலி?
சில வலிகள் மறைவதில்லை
பின்னே எழுத ஆரம்பித்து விட்டாயா?
ஆம்
எப்பொழுதிலிருந்து?
சில மாதங்களுக்கு முன்
அப்படியா! ஏன் இந்த முடிவு?
சில நேரங்களில் வலியால் நான் வலுவடைகிறேன்
நல்ல முதிர்ச்சி உன் பார்வையில்?
நன்றி.
வலியைத் தருவது யார் என்று புரிந்ததா?
ஓரளவு
யார்? உறவுகள் தானே?
இல்லை. சாட்சாத் நானேதான்.
என்ன?
உண்மைதான்
நம்ப முடியவில்லை. எப்படி சொல்கிறாய்?
என் எதிர்ப்பார்ப்புகள் என்னை ஏமாற்றும் போது வலியை அனுபவிக்கிறேன்
எங்கிருந்து பெற்றாய் இத்தனை ஞானத்தை?
தனிமையில் ஒர் அலசல். அவ்வளவுதான்
ஆன்மீகத்தில் நாட்டம் வந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்
எதை ஆன்மீகம் என்கிறாய்?
இவ்வாறு தத்துவம் பேசுவதும் தன்னையே அலசுவதும்
அதற்கு பெயர் ஆன்மீகம் என்று கூறினால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
உனக்கு வேறு என்னத் தெரியும்?
ஒன்றும் தெரியாது
நீ எப்பொழுதும் அடக்கம்தான். சரி, பழையக் கேள்விக்கே வருகிறேன். உறவுகளைப் பற்றி உன் கருத்து...?
அன்பினால் அனைவரும் உறவினர்களே
ஆஹா.... அருமை. ஆனால் அதே உறவுகளால் நீ கிழிபடும் போது?
நான் அவர்களை மனதாலும் திருப்பி கிழிக்காமல் பார்த்துக் கொள்ள முயல்கிறேன்
நீ ஜடமோ?
இல்லை. உணர்வுகள் நிறைய உண்டு
வஞ்சம் தீர்க்க மாட்டாயோ?
வருத்தமும் வலியும் மட்டும் நிறைய எஞ்சி நிற்கும். அதை கவனத்துடன் கையாள வேண்டும்
அதை மறக்க நினைப்பாயோ?
எதற்கு மறக்க வேண்டும்
உனக்கு கோபம் வராதோ?
என்னை அதற்குள் ஞானியாக்கிவிட்டாயே, மனமே
யாரிடம் இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?
என் அனுபவங்கள்
எதையாவது சாதிக்க விருப்பமுண்டா?
உண்டே
அப்பாடா உனக்கும் ஆசை உண்டு என்றதும் தான் நிம்மதி அடைந்தேன். அப்படி என்ன ஆசை, இதயமே?
நிகழ்காலத்தில் மட்டும் வாழ ஆசை
உன்னைப் போய் கேட்டேனே! உன்னைப் பற்றி ஒரு வரியில் சொல்லேன்
நான் ஒரு பிறவிக் காதலி
யாரைக் காதலிக்கிறாய்?
கண்ணனை
அப்படியெனில் என்னை ஏற்றுக் கொள்ளுமாறு உன்னிடம் வைத்த விண்ணப்பம் என்னவாயிற்று?
நான் மறந்ததாக கூறவில்லையே.
பிறகு உன் காதல்........?
உன் ஆன்மாவில் என் கண்ணனைக் காண்கிறேன். அது சரி. ஏன் நீ தெளிந்து விட்டாயா?
மன்னித்துவிடு. உன் தெளிவு என்னிடம் இல்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லேன்?
ஒன்றும் செய்யாதே
புரியவில்லை
வருவதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள். புரிந்து கொள்வாய்
சரி, முயல்கிறேன். அது வரை எனக்காக காத்திருப்பாயா, இதயமே?
நிச்சயம். கொடுத்த வாக்கை நான் என்றும் தவற விடுவதில்லை
நான் தடம் புரண்டாலும் என்னை அரவணைப்பாயா?
நிச்சயமாக
உன் சந்திப்பினால் தூய்மையடைந்தேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி, மனமே
உன் நினைவுடன் என்றும் நான்
நானும் அப்படியே
[இந்த உரையாடலுக்கு பின் கவிஞன் வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும் அமைதியாய் மீண்டும் தன் பெட்டியில் பத்திரமாக எடுத்து வைத்தான்]
காதலும் காதலும்
மார்கழித் திங்களில் ஒருநாள்
அதிகாலை விடியலில் எழுந்தாள்
புள்ளிமானாய் துள்ளி நடந்தாள்
புள்ளி வைத்தே கோலமிட்டாள்
அவனையும் அன்றே கண்டாள்
மௌனமே தாய்மொழி ஆனதோ
கண்களே கவிதைதனை வடித்ததோ
தனிமையே உற்ற துணையானதோ
கிறுக்கல்களே வடிகாலும் ஆனதோ
நெஞ்சமும் அதிர்ந்தே ஏங்கியதோ
அவளை இதயத்தில் வைத்தான்
நிலவை அவளுடன் ரசித்தான்
காற்றை அவளாய் சுவாசித்தான்
பிரிவை வலியாய் உணர்ந்தான்
இரவை கனவில் கழித்தான்
கண்டதால் உணவும் கசந்ததோ
காரணத்தால் காதலும் முறிந்ததோ
ஏக்கத்தால் பணியும் நின்றதோ
கண்ணீரால் மனதை நனைத்ததோ
காணாமல் காலமும் போனதோ
முதுமையில் புள்ளியாய் நின்றாள்
இளமையான அவனை நினைத்தாள்
ஓய்ந்தே நினைவுகளில் சென்றான்
அழகான அவளைமட்டும் கண்டான்
ஒருமுறை வருடிய காதலை
மறந்தும் நெஞ்சம் மறக்குமோ
பிரிவால் துடித்தாலும் சாதலை
காதலும் என்னாளும் ஏற்குமோ
அதிகாலை விடியலில் எழுந்தாள்
புள்ளிமானாய் துள்ளி நடந்தாள்
புள்ளி வைத்தே கோலமிட்டாள்
அவனையும் அன்றே கண்டாள்
மௌனமே தாய்மொழி ஆனதோ
கண்களே கவிதைதனை வடித்ததோ
தனிமையே உற்ற துணையானதோ
கிறுக்கல்களே வடிகாலும் ஆனதோ
நெஞ்சமும் அதிர்ந்தே ஏங்கியதோ
அவளை இதயத்தில் வைத்தான்
நிலவை அவளுடன் ரசித்தான்
காற்றை அவளாய் சுவாசித்தான்
பிரிவை வலியாய் உணர்ந்தான்
இரவை கனவில் கழித்தான்
கண்டதால் உணவும் கசந்ததோ
காரணத்தால் காதலும் முறிந்ததோ
ஏக்கத்தால் பணியும் நின்றதோ
கண்ணீரால் மனதை நனைத்ததோ
காணாமல் காலமும் போனதோ
முதுமையில் புள்ளியாய் நின்றாள்
இளமையான அவனை நினைத்தாள்
ஓய்ந்தே நினைவுகளில் சென்றான்
அழகான அவளைமட்டும் கண்டான்
ஒருமுறை வருடிய காதலை
மறந்தும் நெஞ்சம் மறக்குமோ
பிரிவால் துடித்தாலும் சாதலை
காதலும் என்னாளும் ஏற்குமோ
ஏனிந்த மாற்றம்
சிசுவாய் நான் ஜனிக்க
தாயாய் என்னைக் காத்தாய்
இயலாமையில் உன்னை நோக்க
பெருமையில் மனம் குளிர்ந்தாய்
பொறுமையின்றி நான் கதற
பொறுப்புடன் என்னை கவனித்தாய்
காலம் வேகமாய் உருண்டோட
காலனை கண்டுவிட்டு வந்தாய்
அன்று தாயாய் உன் கண்களில் அன்பு
சேயாய் என் கண்களில் கண்ணீர்
இன்று தாயாய் என் கண்களில் கண்ணீர்
சேயாய் உன் கண்களில் நன்றி
அன்று உன் அரவணைப்பில் நான்
இன்று என் அரவணைப்பில் நீ
அன்று உன் குழந்தையாய் நான்
இன்று என் குழந்தையாய் நீ
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
தாயாய் என்னைக் காத்தாய்
இயலாமையில் உன்னை நோக்க
பெருமையில் மனம் குளிர்ந்தாய்
பொறுமையின்றி நான் கதற
பொறுப்புடன் என்னை கவனித்தாய்
காலம் வேகமாய் உருண்டோட
காலனை கண்டுவிட்டு வந்தாய்
அன்று தாயாய் உன் கண்களில் அன்பு
சேயாய் என் கண்களில் கண்ணீர்
இன்று தாயாய் என் கண்களில் கண்ணீர்
சேயாய் உன் கண்களில் நன்றி
அன்று உன் அரவணைப்பில் நான்
இன்று என் அரவணைப்பில் நீ
அன்று உன் குழந்தையாய் நான்
இன்று என் குழந்தையாய் நீ
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
ஏனிந்த மாற்றம் நம் நிலைகளில்
என்னைக் காதலித்துப் பார்
தேனை சுவைத்த நாக்குடன்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்
அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்
கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்
காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்
கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்
உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்
அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்
கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்
காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்
கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்
உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார்
இங்க கொஞ்சம் கேளுங்க – 4
இங்க கொஞ்சம் கேளுடி கண்ணு
என்ராகத்த கொஞ்சம் புரிஞ்சுக்க கண்ணு
என் உசிரவிட்டு பாடுறனே
கேக்குதாடி என் செல்லக் கண்ணு
கரடு மொரடா இருந்த மனச
குளுகுளுன்னு மாத்திபுட்ட
ஏத்தத்தோட அலஞ்ச மனச
சரசரன்னு எறக்கிபுட்ட
கெத்தா திரிஞ்ச என்ன
கனவுலதான கட்டிபுட்ட
காதலுன்னா சிரிச்ச எனக்கு
தவிப்ப தான தந்துபுட்ட
வொன் குரல கேட்கத்தான
நானு இங்க நிக்கேனே மாமா
என் கண்ணீர தொடைக்கத்தான
நீ பாடுறீயோ சொல்லு மாமா
திமிரு புடிச்சு வம்படிச்ச
என் வாயத்தான தச்சுபுட்ட
கடகடன்னு சிரிச்ச என்ன
அடக்கமாத்தான மாத்திபுட்ட
படிப்பு இல்ல பிடிப்புமுல்ல
இருந்தாலும் ஏத்துகிட்ட
மேகத்த பாத்து என்ன பாத்து
கவித எழுதி தள்ளிபுட்ட
கண்ணு ரெண்டும் செவந்து போக
அழுத காலம் உண்டு மாமா
நீ வரப்போற சங்கதிய கேட்டு
வொந்தெசய பாத்தே இருக்கேனே மாமா
ஏனோ எனக்கு தெரியலயே
உன்ன பாக்கத்தான துடிக்குறனே
அழகால மயங்காத என்ன
வொன் மனசால இறுக்கினியே
செவப்புசேல வாங்கி வந்தேன்
சிவத்த பொண்ணு உன்ன பாக்க
உன் அப்பன்கிட்ட கேட்டுவிட
மஞ்ச சரடு கட்டிவிட
சோந்து இருந்த என்ன காண
தல கோத வாரீயா
வொன் மடியிலயே தலசாய்ச்சு
அழுற என்ன சிரிக்கவக்க வாரீயா
புது வருசத்தில சேதியா
வொன் வரவுவந்துது பாத்தியா
என்ன பாக்க வாரீயா
தாலி கட்ட வாரீயா
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க நல்லா இருக்கவே
நீங்க நேந்துகிட வேணுங்க
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க சிரிச்சு வாழவே
நீங்க நேந்துகிட வேணுங்க
என்ராகத்த கொஞ்சம் புரிஞ்சுக்க கண்ணு
என் உசிரவிட்டு பாடுறனே
கேக்குதாடி என் செல்லக் கண்ணு
கரடு மொரடா இருந்த மனச
குளுகுளுன்னு மாத்திபுட்ட
ஏத்தத்தோட அலஞ்ச மனச
சரசரன்னு எறக்கிபுட்ட
கெத்தா திரிஞ்ச என்ன
கனவுலதான கட்டிபுட்ட
காதலுன்னா சிரிச்ச எனக்கு
தவிப்ப தான தந்துபுட்ட
வொன் குரல கேட்கத்தான
நானு இங்க நிக்கேனே மாமா
என் கண்ணீர தொடைக்கத்தான
நீ பாடுறீயோ சொல்லு மாமா
திமிரு புடிச்சு வம்படிச்ச
என் வாயத்தான தச்சுபுட்ட
கடகடன்னு சிரிச்ச என்ன
அடக்கமாத்தான மாத்திபுட்ட
படிப்பு இல்ல பிடிப்புமுல்ல
இருந்தாலும் ஏத்துகிட்ட
மேகத்த பாத்து என்ன பாத்து
கவித எழுதி தள்ளிபுட்ட
கண்ணு ரெண்டும் செவந்து போக
அழுத காலம் உண்டு மாமா
நீ வரப்போற சங்கதிய கேட்டு
வொந்தெசய பாத்தே இருக்கேனே மாமா
ஏனோ எனக்கு தெரியலயே
உன்ன பாக்கத்தான துடிக்குறனே
அழகால மயங்காத என்ன
வொன் மனசால இறுக்கினியே
செவப்புசேல வாங்கி வந்தேன்
சிவத்த பொண்ணு உன்ன பாக்க
உன் அப்பன்கிட்ட கேட்டுவிட
மஞ்ச சரடு கட்டிவிட
சோந்து இருந்த என்ன காண
தல கோத வாரீயா
வொன் மடியிலயே தலசாய்ச்சு
அழுற என்ன சிரிக்கவக்க வாரீயா
புது வருசத்தில சேதியா
வொன் வரவுவந்துது பாத்தியா
என்ன பாக்க வாரீயா
தாலி கட்ட வாரீயா
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க நல்லா இருக்கவே
நீங்க நேந்துகிட வேணுங்க
இங்க கொஞ்சம் கேளுங்க
இதையும் கொஞ்சம் கேளுங்க
நாங்க சிரிச்சு வாழவே
நீங்க நேந்துகிட வேணுங்க
Subscribe to:
Comments (Atom)