என் மனதில் தேக்கி வைத்துள்ள சின்ன பெரிய ஆசைகள் எத்தனை எத்தனை! இதோ உங்கள் பார்வைக்கு…
வானவில்லை போல வளைந்து நிற்க ஆசை
மழை சாரலிலே தொப்பி போட்டு நடக்க ஆசை
சூரியனுடன் கிழக்கும் மேற்கும் ஓடவே ஆசை
ஊஞ்சலில் ஆடியே மேகத்தை தொட்டு வர ஆசை
ஐன்னலில் ஊடுறுவும் கிரணங்களை கைகளில் அடக்க ஆசை
பறவையைப் போல உயர பறந்து வர ஆசை
பட்டாம்பூச்சியின் பின்னே கவலையின்றி துரத்த ஆசை
தீண்டிய தென்றலை கட்டியணைக்க ஆசை
குழந்தையின் பட்டுப் போன்ற கைகளை முகத்தில் வைக்க ஆசை
மொட்டையடித்துக் கொண்டு முகத்தை ரசிக்க ஆசை
அலை அலையான கூந்தலுடன் மறுநாளே மாறிவிட ஆசை
குழந்தையைப் போல குறும்பு செய்ய ஆசை
மூளையின்றி ஒரு நாள் பைத்தியமாக மாற ஆசை
பாண்டி விளையாடி விளையாடி களைத்து விட ஆசை
ஈரமான தலையை நீர் தெறிக்க சிலுப்பி விட ஆசை
அவை மற்றவர் மேல் பட்டு அவர் முகத்தின் பாவத்தை ரசிக்க ஆசை
இருட்டில் ஒலிக்கும் ஓசைகளை மூலையில் அமர்ந்து கேட்க ஆசை
மனம் நிறைய துக்கத்துடன் வாய்விட்டு சிரிக்க ஆசை
கிறிஸ்துவ சகோதரியின் தூய்மையான உடையணிய ஆசை
அதனை களைந்தவுடன் தேவதையாக மாறி விட ஆசை
ஆபரணம் அலங்காரம் இன்றி அழகற்று நிற்க ஆசை
கண்களில் ஒளியை தாங்கி பலரை உயர்த்தி விட ஆசை
கைகளில் பணமின்றி பலரிடம் பிச்சையெடுக்க ஆசை
மழைத் துளிகளின் வேகத்திலே என் கண்ணீரை கரைக்க ஆசை
கடலலைகளின் தாக்கத்திலே அதனுள் விழுந்து விட ஆசை
எழுந்து விட்டு பின்னே அதனை எண்ணி விட ஆசை
நேரத்தின் ஓட்டத்தை சிறிது நிறுத்தி விட ஆசை
தாயின் மடியில் படுத்துக் கொண்டு கதறியழ ஆசை
மழை நீரின் சகதியிலே தட்டி தட்டி நடக்க ஆசை
கடற்கரையின் மணலில் அமர்ந்து தியானம் செய்ய ஆசை
கிராமத்து பெண்களின் வெகுளிதனத்தில் மனம் தொலைக்க ஆசை
நுனி வாழை இலையிலே தினமும் ரசம் சாதம் உண்ண ஆசை
பார்த்து பார்த்து உபசரித்து பலர் என்னை கவனித்துக் கொள்ள ஆசை
ஓவியனின் தூரிகை கொண்டு இயற்கையை வரைய ஆசை
ஓடும் காட்டாற்றிலே பரிசலில் செல்ல ஆசை
எறும்பு புற்றின் ரகசியத்தை அறிந்து கொள்ள ஆசை
நாய்குட்டியின் மூக்கின் மேலே என் மூக்கை வைத்து கொஞ்ச ஆசை
நிலவொளியின் அழகிலே கடற்கரையில் நடக்க ஆசை
யாருமற்ற தீவிலே தனியே ஒரு நாள் கழிக்க ஆசை
இமயமலையின் உச்சிக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை
மனிதர்களின் குணமறிந்து புரிந்து நடக்க ஆசை
அனைத்து கலைகளையும் கரைத்து குடிக்க ஆசை
வறியவர் இல்லாத உலகை காண பலநாள் ஆசை
காதலில் நனைந்து உருகி ராதையாகி விட ஆசை
கண் சிமிட்டும் நேரத்திலே சிறு குழந்தையாகி விட ஆசை
பிரிந்த என் அன்புத் தந்தையை காண மிக்க ஆசை
தெளிந்த ஏரி நீரின்மேல் அமைதி குலையாமல் நடக்க ஆசை
உறைக்கும் பனியின் மேல் உருளத்தான் ஆசை
பிறர் உபாதைகளை என் உடலில் ஏற்றுக் கொள்ள ஆசை
அனைத்து உறவையும் மனதார வாழ்த்தவே ஆசை
பிறர் நலனுக்காக பணத்தையும் மனத்தையும் கொடுக்கவே ஆசை
சிரித்துக் கொண்டே தனிமையிலே சில வருடங்களில் மறையத்தான் ஆசை
Monday, September 25, 2006
ஏன் செல்கிறாய் என்னை விட்டு?
பெண்ணே!
ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?
நான் நல்லவள் என்று சொன்னாய்
அன்புடையவள் என்று சொன்னாய்
பண்புடையவள் என்று சொன்னாய்
அறிவுடையவள் என்றும் சொன்னாய்
ஆனால் ஏன் செல்கிறாய் என்னை விட்டு?
உன் வருகை என் வாழ்வில் வந்த வசந்தம்
நம் நட்பு ஏற்றத்தாழ்வில் வந்த பந்தம்
இது சுத்த மனதினால் உணர்ந்த காந்தம்
புரிந்தது இவ்வுலகில் ஏதுமில்லை சொந்தம்
இருந்தும் கேட்கிறது மனம் ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?
பெற்றோரை பேணிக் காக்க செல்கிறாய்
குழந்தைகளின் ஆரோக்கியம் வேண்டி செல்கிறாய்
ஆசானின் ஆசிர்வாதம் பெறவும் முயல்கிறாய்
சுற்றம் உறவினர் நலன் கருதியும் செல்கிறாய்
என்னை விட்டும் ஏனோ செல்கிறாய்
உறவுகளை பற்றி நாம் பேசினோம்
உணர்வுகளின் கேளிக்கைகளையும் அலசினோம்
உணவையும் தினமும் பரிமாறிக் கொண்டோம்
நட்பையும் கூடவே வளர்த்துக் கொண்டோம்
இருந்தும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு
மகிழ்ச்சியின் போது கை குலுக்கிக் கொண்டோம்
துக்கத்தின் போது அடுத்தவர் கைகளைப் பற்றிக் கொண்டோம்
விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொண்டோம்
பிரார்த்தனையில் ஒருமித்தும் அமர்ந்தோம்
இருப்பினும் இவை மறந்து என்னை விட்டு ஏனோ செல்கிறாய்
ஆன்மீகம் அலசிப் பார்த்தோம்
அதன் முறைப்படி நடக்க நினைத்தோம்
ஆன்மாவை நினைவு கூர்ந்தோம்
இருப்பினும் உணர்வுகளில் தடுமாறினோம்
இந்த தடுமாற்றத்தில் ஏனோ என்னை விட்டு செல்கிறாய்
விண்மீன்களின் மினுமினுப்பை கண்டேன்
உன் கண்களில் அதன் மர்மம் கண்டேன் என் தோழி
பரந்த கடலை நினைத்துக் கொண்டேன்
உன் மனதை என் முன் நிறுத்தினாய் என் தோழி
ஆனாலும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு?
இந்த தோழியிடம் அன்பைத் தவிர வேறில்லை
உன் பிரிவை நினைத்து வருந்தாத நாளில்லை
நித்தமும் உன் குரல் கேட்பேனா என்றும் தெரியவில்லை
கலங்கிய என் கண்களில் கண்ணீரைத் தவிர வேறில்லை
இருந்தும் நான் இப்பொழுது கூறுகிறேன் ‘போய் வா பெண்ணே’
உன் கடமைகளை முறையே செய்து கொண்டிரு
அன்பை எதிரிக்கும் வழங்கி கொண்டிரு
ஆன்மீகத்தில் உயர பறந்து கொண்டிரு
இவ்வுலக வாழ்வையும் ரசித்துக் கொண்டிரு
திரும்பி வந்து உன் முகத்தை எனக்கு காண்பித்துக் கொண்டிரு
ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?
நான் நல்லவள் என்று சொன்னாய்
அன்புடையவள் என்று சொன்னாய்
பண்புடையவள் என்று சொன்னாய்
அறிவுடையவள் என்றும் சொன்னாய்
ஆனால் ஏன் செல்கிறாய் என்னை விட்டு?
உன் வருகை என் வாழ்வில் வந்த வசந்தம்
நம் நட்பு ஏற்றத்தாழ்வில் வந்த பந்தம்
இது சுத்த மனதினால் உணர்ந்த காந்தம்
புரிந்தது இவ்வுலகில் ஏதுமில்லை சொந்தம்
இருந்தும் கேட்கிறது மனம் ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?
பெற்றோரை பேணிக் காக்க செல்கிறாய்
குழந்தைகளின் ஆரோக்கியம் வேண்டி செல்கிறாய்
ஆசானின் ஆசிர்வாதம் பெறவும் முயல்கிறாய்
சுற்றம் உறவினர் நலன் கருதியும் செல்கிறாய்
என்னை விட்டும் ஏனோ செல்கிறாய்
உறவுகளை பற்றி நாம் பேசினோம்
உணர்வுகளின் கேளிக்கைகளையும் அலசினோம்
உணவையும் தினமும் பரிமாறிக் கொண்டோம்
நட்பையும் கூடவே வளர்த்துக் கொண்டோம்
இருந்தும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு
மகிழ்ச்சியின் போது கை குலுக்கிக் கொண்டோம்
துக்கத்தின் போது அடுத்தவர் கைகளைப் பற்றிக் கொண்டோம்
விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொண்டோம்
பிரார்த்தனையில் ஒருமித்தும் அமர்ந்தோம்
இருப்பினும் இவை மறந்து என்னை விட்டு ஏனோ செல்கிறாய்
ஆன்மீகம் அலசிப் பார்த்தோம்
அதன் முறைப்படி நடக்க நினைத்தோம்
ஆன்மாவை நினைவு கூர்ந்தோம்
இருப்பினும் உணர்வுகளில் தடுமாறினோம்
இந்த தடுமாற்றத்தில் ஏனோ என்னை விட்டு செல்கிறாய்
விண்மீன்களின் மினுமினுப்பை கண்டேன்
உன் கண்களில் அதன் மர்மம் கண்டேன் என் தோழி
பரந்த கடலை நினைத்துக் கொண்டேன்
உன் மனதை என் முன் நிறுத்தினாய் என் தோழி
ஆனாலும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு?
இந்த தோழியிடம் அன்பைத் தவிர வேறில்லை
உன் பிரிவை நினைத்து வருந்தாத நாளில்லை
நித்தமும் உன் குரல் கேட்பேனா என்றும் தெரியவில்லை
கலங்கிய என் கண்களில் கண்ணீரைத் தவிர வேறில்லை
இருந்தும் நான் இப்பொழுது கூறுகிறேன் ‘போய் வா பெண்ணே’
உன் கடமைகளை முறையே செய்து கொண்டிரு
அன்பை எதிரிக்கும் வழங்கி கொண்டிரு
ஆன்மீகத்தில் உயர பறந்து கொண்டிரு
இவ்வுலக வாழ்வையும் ரசித்துக் கொண்டிரு
திரும்பி வந்து உன் முகத்தை எனக்கு காண்பித்துக் கொண்டிரு
இருபது ஆண்டுகளுக்கு பின்
முதுமையின் பெருமையை தாங்கிதான் நிற்பேனா
வெள்ளை முடிசூடி என் அழகைதான் இரசிப்பேனா
முகங்கள் பல கண்டு துள்ளிக் குதித்து மகிழ்வேனா
முகமே தேவையில்லை என்று மறைந்து தான் வாழ்வேனா
நோய்களின் பாசத்திலே துவண்டு போய் விடுவேனா
உடலின் வலிமையிலே தேனீ போல் வாழ்வேனா
கண்களிலே ஒளியிழந்து இருளைதான் மணப்பேனா
கண்ணல்லவோ நீ என அகம் மகிழ வைப்பேனா
கால்களிலே வலுவிழந்து தடியை தான் பிடிப்பேனா
நிமிர்ந்த நடை போட்டு உலகையே வலம் வருவேனா
சொற்களின் ஜாலங்களில் மயங்கியேதான் இருப்பேனா
வார்த்தைகளின் தாலாட்டில் பலரையும் உடன் அழைப்பேனா
கலைகளை கற்காததால் மனம் நொந்து போவேனா
வாழ்வின் கலையிலே தலை சிறந்து விளங்குவேனா
தாயின் இறுதி மூச்சு வரை சேவையைதான் செய்வேனா
பெற்றவளின் குணத்தை நான் சிறிதளவாவது கற்பேனா
மைந்தனின் வாழ்விலே அவன் நலனையேதான் நாடுவேனா
சுதந்தரமாய் படிக்க வைத்து பறக்க விட்டு மகிழ்வேனா
கணவனின் குறிப்பறிந்து பாசத்திலே திகழ்வேனா
குணமறிந்து மனமறிந்து அன்பு நடை நடப்பேனா
இளமையின் துள்ளலுடன் இயற்கையைதான் பார்ப்பேனா
இளவயது நினைவுகளை நினைவு கூர்ந்து சிரிப்பேனா
தொட்டு விட்டு ஓடி விடும் அலைகளை அணைக்கத்தான் துடிப்பேனா
எட்ட நின்று வானவில்லின் வண்ணத்திலே குழைவேனா
தாலாட்டும் செடிகளோடு தலை சாய்த்து சிரிப்பேனா
மலர்களின் மென்மையை தொட்டுதான் உணர்வேனா
நீலநிற வானத்தின் பொய்மையிலேதான் கரைவேனா
சூரியனின் ஒளிகளிலே தத்துவத்தையே உணர்வேனா
கள்ளமில்லா புன்னகையோடு அனைவரையும் கவர்வேனா
பார்த்து பார்த்து கவனித்தே எல்லோரையும் உபசரிப்பேனா
மகிழ்ச்சியற்ற நினைவுகளிலே வருந்தியேதான் அழுவேனா
வாழ்வின் சிறப்பம்சத்தை நன்றியோடு நினைப்பேனா
நன்றி கொண்டு நண்பர்களை பார்த்து விட்டு வருவேனா
கரம் குவித்து வணங்கி விட்டு என் நன்றியைதான் சொல்வேனா
நெஞ்சைத் தொட்ட மனிதர்களின் பாதங்களைதான தொடுவேனா
சிறிய பெரிய அனாதைகளை அரவணைத்து காப்பேனா
தொண்டு செய்யும் உள்ளங்களை தேடி சென்று பாராட்டுவேனா
தோளோடு தோள் நின்று ஊக்குவித்து காட்டுவேனா
வறுமையிலே திகழ்ந்தாலும் இனிமையிலே மிளிர்வேனா
மாளிகையாக உயர்ந்தாலும் மதி கெடாமல் நடப்பேனா
சுற்றம் கூடி ஒதுக்கி வைத்து தனிமரமாய் நிற்பேனா
ஆழ்கடலின் அமைதியைதான் மனதில் நிறுத்தி தாங்குவேனா
வீழ்ந்து விட்ட விநாடிகளை வேகமாக மறப்பேனா
எழுந்து விட்டு விவேகானந்தரைப் போல் பயமின்றி கர்ஜிப்பேனா
மாந்தர்களின் நலனுக்காக நெக்குருகி பிரார்த்திப்பேனா
உண்மையின் கை கோர்த்து உன்மத்தம் ஆவேனா
பிறந்து விட்ட காரணத்தால் வாழ வேண்டுமே என்று சலிப்பேனா
அன்பின் எல்லையிலே இமயமலைதான் கடப்பேனா
சுட்டு விட்ட வார்த்தைகளின் சூட்டிலேயே கருகுவேனா
தாங்கிக் கொண்டு நிமர்ந்து நின்று கருணையையே பொழிவேனா
வரமே வேண்டாத வரம் கேட்டு உன்னதமாய் உயர்வேனா
பிறருக்காக எப்பொழுதும் செருப்பாகவே உழைப்பேனா
துள்ளி ஓடும் என் கண்ணனை ஓடியேதான் பிடிப்பேனா
ராதையை போல் ஊஞ்சலாடி அவன் இசையிலேதான் கரைவேனா
படபடக்கும் சிட்டுக்குருவியின் இறக்கையைதான் பெறுவேனா
உயிர் பிரிந்து சென்ற பின்னே உயர உயர பறப்பேனா
காலத்தின் வேகத்திலே ஓடி ஓடி களைப்பேனா
மனம் உவந்து சிரித்து மகிழ்ந்து அன்றாடம் வாழ்வேனா
இன்னும் எத்தனை எத்தனை என்று எண்ண முடியாமல் திணறுகிறேனா
இவை எதுவும் காணாமல் இன்னும் சில நொடிகளிலே மறைவேனா
வெள்ளை முடிசூடி என் அழகைதான் இரசிப்பேனா
முகங்கள் பல கண்டு துள்ளிக் குதித்து மகிழ்வேனா
முகமே தேவையில்லை என்று மறைந்து தான் வாழ்வேனா
நோய்களின் பாசத்திலே துவண்டு போய் விடுவேனா
உடலின் வலிமையிலே தேனீ போல் வாழ்வேனா
கண்களிலே ஒளியிழந்து இருளைதான் மணப்பேனா
கண்ணல்லவோ நீ என அகம் மகிழ வைப்பேனா
கால்களிலே வலுவிழந்து தடியை தான் பிடிப்பேனா
நிமிர்ந்த நடை போட்டு உலகையே வலம் வருவேனா
சொற்களின் ஜாலங்களில் மயங்கியேதான் இருப்பேனா
வார்த்தைகளின் தாலாட்டில் பலரையும் உடன் அழைப்பேனா
கலைகளை கற்காததால் மனம் நொந்து போவேனா
வாழ்வின் கலையிலே தலை சிறந்து விளங்குவேனா
தாயின் இறுதி மூச்சு வரை சேவையைதான் செய்வேனா
பெற்றவளின் குணத்தை நான் சிறிதளவாவது கற்பேனா
மைந்தனின் வாழ்விலே அவன் நலனையேதான் நாடுவேனா
சுதந்தரமாய் படிக்க வைத்து பறக்க விட்டு மகிழ்வேனா
கணவனின் குறிப்பறிந்து பாசத்திலே திகழ்வேனா
குணமறிந்து மனமறிந்து அன்பு நடை நடப்பேனா
இளமையின் துள்ளலுடன் இயற்கையைதான் பார்ப்பேனா
இளவயது நினைவுகளை நினைவு கூர்ந்து சிரிப்பேனா
தொட்டு விட்டு ஓடி விடும் அலைகளை அணைக்கத்தான் துடிப்பேனா
எட்ட நின்று வானவில்லின் வண்ணத்திலே குழைவேனா
தாலாட்டும் செடிகளோடு தலை சாய்த்து சிரிப்பேனா
மலர்களின் மென்மையை தொட்டுதான் உணர்வேனா
நீலநிற வானத்தின் பொய்மையிலேதான் கரைவேனா
சூரியனின் ஒளிகளிலே தத்துவத்தையே உணர்வேனா
கள்ளமில்லா புன்னகையோடு அனைவரையும் கவர்வேனா
பார்த்து பார்த்து கவனித்தே எல்லோரையும் உபசரிப்பேனா
மகிழ்ச்சியற்ற நினைவுகளிலே வருந்தியேதான் அழுவேனா
வாழ்வின் சிறப்பம்சத்தை நன்றியோடு நினைப்பேனா
நன்றி கொண்டு நண்பர்களை பார்த்து விட்டு வருவேனா
கரம் குவித்து வணங்கி விட்டு என் நன்றியைதான் சொல்வேனா
நெஞ்சைத் தொட்ட மனிதர்களின் பாதங்களைதான தொடுவேனா
சிறிய பெரிய அனாதைகளை அரவணைத்து காப்பேனா
தொண்டு செய்யும் உள்ளங்களை தேடி சென்று பாராட்டுவேனா
தோளோடு தோள் நின்று ஊக்குவித்து காட்டுவேனா
வறுமையிலே திகழ்ந்தாலும் இனிமையிலே மிளிர்வேனா
மாளிகையாக உயர்ந்தாலும் மதி கெடாமல் நடப்பேனா
சுற்றம் கூடி ஒதுக்கி வைத்து தனிமரமாய் நிற்பேனா
ஆழ்கடலின் அமைதியைதான் மனதில் நிறுத்தி தாங்குவேனா
வீழ்ந்து விட்ட விநாடிகளை வேகமாக மறப்பேனா
எழுந்து விட்டு விவேகானந்தரைப் போல் பயமின்றி கர்ஜிப்பேனா
மாந்தர்களின் நலனுக்காக நெக்குருகி பிரார்த்திப்பேனா
உண்மையின் கை கோர்த்து உன்மத்தம் ஆவேனா
பிறந்து விட்ட காரணத்தால் வாழ வேண்டுமே என்று சலிப்பேனா
அன்பின் எல்லையிலே இமயமலைதான் கடப்பேனா
சுட்டு விட்ட வார்த்தைகளின் சூட்டிலேயே கருகுவேனா
தாங்கிக் கொண்டு நிமர்ந்து நின்று கருணையையே பொழிவேனா
வரமே வேண்டாத வரம் கேட்டு உன்னதமாய் உயர்வேனா
பிறருக்காக எப்பொழுதும் செருப்பாகவே உழைப்பேனா
துள்ளி ஓடும் என் கண்ணனை ஓடியேதான் பிடிப்பேனா
ராதையை போல் ஊஞ்சலாடி அவன் இசையிலேதான் கரைவேனா
படபடக்கும் சிட்டுக்குருவியின் இறக்கையைதான் பெறுவேனா
உயிர் பிரிந்து சென்ற பின்னே உயர உயர பறப்பேனா
காலத்தின் வேகத்திலே ஓடி ஓடி களைப்பேனா
மனம் உவந்து சிரித்து மகிழ்ந்து அன்றாடம் வாழ்வேனா
இன்னும் எத்தனை எத்தனை என்று எண்ண முடியாமல் திணறுகிறேனா
இவை எதுவும் காணாமல் இன்னும் சில நொடிகளிலே மறைவேனா
விழியே…
காதல், காட்டம்
கனிவு, கசப்பு
களிப்பு, கண்ணீர்
கனவு, கவலை
எப்படி உன்னால் மட்டும்
உணர்வுகளின் தாக்கங்களை
பிரதிபலிக்க முடிகிறது?
வானத்தில் மின்னும் தாரகைகளும்
வளைந்து நிற்கும் வானவில்லும்
வரைந்து மறையும் மேகமும்
நீ இல்லையெனில்
இருந்துதான் என்ன பயன்?
இரவின் இருளில்
நினைவுகளின் அழுத்தத்தில்
தனிமையின் தவிப்பில்
உடலும் அமைதியான வேளையில்
மூடிய உன் நிலையிலும்
கண்ணீரை விட்டு
எப்படி இயங்க முடிகிறது?
இதயம் சுக்குநூறாக
உடைந்து நொறுங்கும் போது
நீ கண்ணீர் ரத்தத்தை விடுகிறாயே
உனக்கும் இதயத்துக்கும்
அப்படி என்னதான் சம்பந்தம்?
இடது வலது என்று
கைகள் தனித்தனியே
இயங்கும் போது
நீ மட்டும் வெட்கமின்றி
எப்பொழுதும்
உன் ஜோடியுடன்
ஏன் இப்படி அலைகிறாய்?
ஜன்னல்களாக இருந்து
பலரின் இதயங்களை இணைக்கும் நீ
அழகை ஆராதிக்கும் நீ
உன்னையே உன்னால்
ரசிக்க முடிவதில்லையே
ஏன் மறந்தாய் இந்த உண்மையை?
இமைகள் தூங்கிவிட்டதனால்
சிறு துரும்பு உன்னை தாக்க
கண்ணீரோடு அலைகிறாயே
சோகத்தின் உச்சத்தில்
அதிர்ச்சியின் அதிரடியில்
சில நேரங்களில்
ஏன் கண்ணீரற்று உறைகிறாய்?
அழகு உன்னால் அழகு பெற
அறிவு உன்னால் வளர்ச்சி அடைய
சுயநலமிக்க இவ்வுலகில்
நீ மட்டும் ஏனோ
பலனின்றி உழைக்கிறாயே
இது தெரியுமா உனக்கு?
கனிவு, கசப்பு
களிப்பு, கண்ணீர்
கனவு, கவலை
எப்படி உன்னால் மட்டும்
உணர்வுகளின் தாக்கங்களை
பிரதிபலிக்க முடிகிறது?
வானத்தில் மின்னும் தாரகைகளும்
வளைந்து நிற்கும் வானவில்லும்
வரைந்து மறையும் மேகமும்
நீ இல்லையெனில்
இருந்துதான் என்ன பயன்?
இரவின் இருளில்
நினைவுகளின் அழுத்தத்தில்
தனிமையின் தவிப்பில்
உடலும் அமைதியான வேளையில்
மூடிய உன் நிலையிலும்
கண்ணீரை விட்டு
எப்படி இயங்க முடிகிறது?
இதயம் சுக்குநூறாக
உடைந்து நொறுங்கும் போது
நீ கண்ணீர் ரத்தத்தை விடுகிறாயே
உனக்கும் இதயத்துக்கும்
அப்படி என்னதான் சம்பந்தம்?
இடது வலது என்று
கைகள் தனித்தனியே
இயங்கும் போது
நீ மட்டும் வெட்கமின்றி
எப்பொழுதும்
உன் ஜோடியுடன்
ஏன் இப்படி அலைகிறாய்?
ஜன்னல்களாக இருந்து
பலரின் இதயங்களை இணைக்கும் நீ
அழகை ஆராதிக்கும் நீ
உன்னையே உன்னால்
ரசிக்க முடிவதில்லையே
ஏன் மறந்தாய் இந்த உண்மையை?
இமைகள் தூங்கிவிட்டதனால்
சிறு துரும்பு உன்னை தாக்க
கண்ணீரோடு அலைகிறாயே
சோகத்தின் உச்சத்தில்
அதிர்ச்சியின் அதிரடியில்
சில நேரங்களில்
ஏன் கண்ணீரற்று உறைகிறாய்?
அழகு உன்னால் அழகு பெற
அறிவு உன்னால் வளர்ச்சி அடைய
சுயநலமிக்க இவ்வுலகில்
நீ மட்டும் ஏனோ
பலனின்றி உழைக்கிறாயே
இது தெரியுமா உனக்கு?
நீயும் நானும்
நீ சிரித்து
நான் சிரித்து
முகிலினங்கள்
நம்மைப் பார்த்து
தென்றலின் சீண்டலையும்
இனிதே உணர்ந்து
உலகம் மறந்து
கள்ளமற்று
வளர்ந்த
நம் அன்பு
சிலுவையில்
அடைக்கலம் அடைந்ததே
என் கல்லறை
காண நீ வருவாயோ
பி.கு. இது ஒரு மொட்டைத் தலையின் விசும்பல் :D
நான் சிரித்து
முகிலினங்கள்
நம்மைப் பார்த்து
தென்றலின் சீண்டலையும்
இனிதே உணர்ந்து
உலகம் மறந்து
கள்ளமற்று
வளர்ந்த
நம் அன்பு
சிலுவையில்
அடைக்கலம் அடைந்ததே
என் கல்லறை
காண நீ வருவாயோ
பி.கு. இது ஒரு மொட்டைத் தலையின் விசும்பல் :D
நான்
கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்ப்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயக்கமில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்ப்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயக்கமில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
Sunday, September 24, 2006
சின்னச் சின்னக் கண்ணனுக்கு…
கருநீலமேனியிலே பட்டுடுத்தி
கால்களிலே சலங்கைக் கட்டி
பவள வாயில் சிரிப்பைத் தேக்கி
சின்னச் சின்னப் பாதம் வைத்து
என் கழுத்தைக் கட்ட ஓடி வரும்
உன் அழகை காண விரும்புகிறேன்
என்னைத் தேடி வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
குழலின் இனிமையிலே
சிரிப்பின் ஜாலத்திலே
அந்திப் பொழுதினிலே
இயற்கையின் விந்தையிலே
நினைவுகளின் அசைவினிலே
இந்த ஏழையின் நெஞ்சினிலே ஆட
என் கண் மூடி செவிகளில் சிரிப்பாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
என் சீடையும் வெண்ணையும்
உன்னை வாவென்று அழைக்க
குழலூதும் கண்ணனை வேண்டாம் என்றே
ஒதுக்கி வைத்த மனைகளில் எல்லாம்
தேடி ஓடி சேவை செய்யும் உன்னை
நினைத்து நினைத்து வியக்கிறேன்
உனக்காக உண்ணாமல் காத்திருக்கும்
என் கன்னத்தில் முத்தமிட வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
பெற்றத் தாயை அழ வைத்து
வேற்றுத் தாயை பித்தாக்கிய
உன் கல் நெஞ்சம் கண்டும்
வியக்கிறேன் மலைக்கிறேன் துடிக்கிறேன்
துன்பத்திலும் சிரிக்கும் உன்னை ஆராதிக்கிறேன்
என் அன்பின் ஆழத்தைக் காண
என் நெஞ்சில் நிலைக்க வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
கால்களிலே சலங்கைக் கட்டி
பவள வாயில் சிரிப்பைத் தேக்கி
சின்னச் சின்னப் பாதம் வைத்து
என் கழுத்தைக் கட்ட ஓடி வரும்
உன் அழகை காண விரும்புகிறேன்
என்னைத் தேடி வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
குழலின் இனிமையிலே
சிரிப்பின் ஜாலத்திலே
அந்திப் பொழுதினிலே
இயற்கையின் விந்தையிலே
நினைவுகளின் அசைவினிலே
இந்த ஏழையின் நெஞ்சினிலே ஆட
என் கண் மூடி செவிகளில் சிரிப்பாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
என் சீடையும் வெண்ணையும்
உன்னை வாவென்று அழைக்க
குழலூதும் கண்ணனை வேண்டாம் என்றே
ஒதுக்கி வைத்த மனைகளில் எல்லாம்
தேடி ஓடி சேவை செய்யும் உன்னை
நினைத்து நினைத்து வியக்கிறேன்
உனக்காக உண்ணாமல் காத்திருக்கும்
என் கன்னத்தில் முத்தமிட வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
பெற்றத் தாயை அழ வைத்து
வேற்றுத் தாயை பித்தாக்கிய
உன் கல் நெஞ்சம் கண்டும்
வியக்கிறேன் மலைக்கிறேன் துடிக்கிறேன்
துன்பத்திலும் சிரிக்கும் உன்னை ஆராதிக்கிறேன்
என் அன்பின் ஆழத்தைக் காண
என் நெஞ்சில் நிலைக்க வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
சிட்டுக்குருவியே…

அழகான உன்னை வருடவே நினைத்தேன்
படபடக்கும் சிறகுகளைக் கண்டே மயங்கினேன்
அந்த சின்ன அலகின் அழகினிலே கரைந்தேன்
உன் கூட்டையும் சிறிது காணவே விழைந்தேன்
உன்னை அன்புடன் அணைக்கவே வேண்டினேன்
நிலை கொள்ளாமல் தவிக்கும் உன் குணத்தால் வியந்தேன்
உன் குரலின் இனிமையிலே நானும் நனைந்தேன்
நீ சிரிப்பாயோ என்று அறியவே நெருங்கினேன்
பறப்பது உன் உரிமை என்று பெருமிதமடைந்தாயா
விண்ணில் வரைந்த மேகக்கூட்டங்களைதான் பார்த்தாயா
அதை உன்னால் தொட முடியவில்லையே என்று ஏங்கினாயா
இருப்பினும் வாழ்வின் ராகங்களை அமைதியாய் ஏற்றாயா
பல கவிஞர்களை மயக்கும் உன் பெருமையை அறிவாயோ
அகிலமும் உன் கையிலே என்பதை உணர்வாயோ
அன்றாட அலுவல்களை உணர்ந்தேதான் செய்வாயோ
என் அருகாமையையும் ஏற்று சிறிது மகிழ்வாயோ
வாழ்வது எதனாலே
கண்களாலே கருணைப் பொழிந்து
வாக்கினிலே இனிமை கலந்து
கைகளாலே அரவணைத்து
கால்களாலே உலகம் சுற்றி
மூச்சினிலே உயிரை வைத்து
இசையினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அழகினைத்தான் வெளிக் கொணர்ந்து
உணர்வுகளாலே உயர்ந்து நின்று
நல்லாசானின் அறிவுரை ஏற்று
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடமையிலே தலைசிறந்து
பிறருக்காக மனம் கசிந்து
மனதினிலே உண்மை நிலைத்து
அன்பினாலே சுடர் ஏற்றி
தியானத்தின் முறை அறிந்தே
ஞானத்தின் வழி அடைந்து
மௌனத்தை உணர செய்து
ஆரவாரமற்ற ஒரு மூலையிலே
பிறருக்கும் பகிர்ந்தளித்தே
வாழ விரும்புகிறேன் நான்
வாக்கினிலே இனிமை கலந்து
கைகளாலே அரவணைத்து
கால்களாலே உலகம் சுற்றி
மூச்சினிலே உயிரை வைத்து
இசையினிலே மெய்மறந்து
கவிதையாக வாழ்ந்து காட்டி
அழகினைத்தான் வெளிக் கொணர்ந்து
உணர்வுகளாலே உயர்ந்து நின்று
நல்லாசானின் அறிவுரை ஏற்று
அடக்கத்திலே சிறந்து விளங்கி
கடமையிலே தலைசிறந்து
பிறருக்காக மனம் கசிந்து
மனதினிலே உண்மை நிலைத்து
அன்பினாலே சுடர் ஏற்றி
தியானத்தின் முறை அறிந்தே
ஞானத்தின் வழி அடைந்து
மௌனத்தை உணர செய்து
ஆரவாரமற்ற ஒரு மூலையிலே
பிறருக்கும் பகிர்ந்தளித்தே
வாழ விரும்புகிறேன் நான்
Subscribe to:
Comments (Atom)