சுத்தசங்கீத உராய்வுகளில் நெகிழ்ந்து காது மடல் நாண
தத்தியழைக்கும் குரலதனை கேட்டு மனம் தட்டாமலை சுற்ற
சித்திரமான பாதங்களோ சிலிர்த்து விண்ணை நோக்கிப் பறக்க
நித்தியசுகத் தென்றலால் பட்டுக் கூந்தல் பறக்கக் கண்டேனே
தூயமலை விளிம்பில் நின்று பயமின்றி சரிவினையே ரசிக்க
காயமின்றி உருண்டிடவே இதயம் ஏனோ ஆசையில் ஏங்க
மாயலோக கனவதுவாய் பனியும் விரிந்து படர்ந்து அழைக்க
சாயம்பூசா கன்னங்களும் சிரிப்பில் வெட்கி அசையக் கண்டேனே
கரைகாணா என்னன்பில் குழவியென உள்ளம் பொங்கி மகிழ
தரைதொடாத சொர்க்கத்திலே தனியே உடலோ கரைந்து உறைய
நுரைபொங்கும் நினைவுகளை அன்புடன் கட்டி இறுக்கி விட்டும்
விரைந்து நகராமல் கால்கள் தடுமாறித் துவளக் கண்டேனே
மலைச்சரிவில் என் கதையை ஆவலுடன் தேடுபவரோ
விலைமதிப்பற்ற புதர்களென நகைப்பதை கண்டேனே
சாலையற்ற பயணப்பாதை தடயங்களை என்னுள் வரைந்து
சிலையான பின்னும் என்னுயிர் மட்டும் நடந்திடவே கற்றுள்ளேனே
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!
Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!
Very nice Padmaja. Strong words are used and your imaginations are simply great!
Post a Comment