வெள்ளையுடை தரித்து
முட்டைக் கண்ணாடியணிந்து
ஆட்டுப்பால் குடித்து
கட்டாந்தரையில் படுத்து
சொந்தபந்தம் பாகுபாடின்றி
அஹிம்சையெனும் ஆயுதமேந்தி
மத ஒற்றுமையை போதித்து
உண்ணாவிரதம் இருந்து
நாட்டின் சுதந்திரமே
கர்மமென வாழ்ந்தீரே
கலர்கலராய் துண்டு போர்த்தி
சுகத்திலே உருண்டு புரண்டு
சொந்தங்களை கவனித்து
உண்டுவிட்டு உண்ணாவிரதமிருந்து
பிறரின் சதையை வதைத்து
நிதி சேர்த்து நீதியை மிதித்து
நீதிபதியை கண்டித்து
சுதந்திரத்தை நிலைநாட்டும்
நல்லோர் வாக்கினுள்
அரசியல் சிரஞ்சீவியானதை
கலங்காமல் உணர்ந்தீரோ
சபர்மதி ஆசிரமத்தில்
குல்லாய் அணிந்து
சாதி மத பேதமின்றி
அனைவரையும் அணைத்து
அன்பாய் அரவணைத்து
புல்லட் புரூப் வண்டியின்றி
கால்நடையாக நடந்து
அரசியல் புரியாமல்
திறந்த நெஞ்சுடன் வாழ்ந்தீரே
பதவி மோகத்தில்
நாட்டையும் தன்னையும்
விற்கும் அரசியல்வாதிகள்
உம்மை இன்று மட்டும்
மாலையால் தழுவும் போது
உந்தன் நெஞ்சிலிருக்கும் ராமர்
வலி தாளாமல் துடித்துக்
கதறுவதை உணர்கிறீரோ
மதங்கடந்து மனமொன்றவே
சரிசமமாய் அனைவருக்கும்
நான்கு புருஷார்த்தங்களென
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்
கற்றுத் தந்த வெகுளித் தந்தையே
வன்மம், சூழ்ச்சி, சுயநலம், பேராசை
இவை மட்டுமே உயிர் வாழத் தேவை
என்ற துண்டாடும் கொள்கைகளை
தற்போதைய அரசியல் தலைவர்களிடம்
கற்றுக் கொள்ளாமல் பிறந்து இறந்தது
பரிதாபமே என்பதை உணர்வீரோ
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Wow Padmaja! Your poem reflects the contemporary political attrocities. If Gandhiji was alive today,he would have regretted having struggled a lot for India's independence from the hands of the British.
Good stuff!
Xlent..
Great tribute to Mahatma Ji
Chak De India
Surya
Chennai
butterflysurya@gmail.com
Post a Comment