Thursday, September 20, 2007

அவனும் அவளும்

சந்தங்கள் போட்டியிட்டன அவள் விழியைக் கண்டு
சங்கதிகள் களைகட்டின அவன் உவகை கண்டு
சங்தேகங்கள் முளைத்தன அவள் அழகைக் கண்டு
சங்கேதங்கள் கலகலத்தன அவன் சிமிட்டல் கண்டு

சலசலத்தன இலைகளும் அவள் நாதம் கண்டு
சலாமிட்டன உலகம் அவன் சாதனை கண்டு
சலங்கைகளோ அணைத்தன அவள் பாதம் கண்டு
சலிப்புகளே ஓடினவே அவன் உற்சாகம் கண்டு

காலோசையும் மருண்டன அவள் மென்மை கண்டு
காலணிகள் நடுங்கின அவன் மேன்மை கண்டு
காலங்கள் தடுமாறின அவள் வெண்மை கண்டு
காலவனும் ரசித்தானே அவன் மதியைக் கண்டு

மாதுளை வெட்கின அவள் வண்ணம் கண்டு
மாதுக்கள் வியந்தனர் அவன் எண்ணம் கண்டு
மாதாவாய் போற்றினர் அவள் அன்பைக் கண்டு
மாதிரியாய் கொண்டனர் அவன் பண்பைக் கண்டு

சித்திரங்களே சிலிர்த்தன அவள் ரசனை கண்டு
சித்தங்களோ குளிர்ந்தன அவன் சிரிப்பைக் கண்டு
சித்திகள் குவிந்தன அவள் அடக்கம் கண்டு
சித்பவமாய் ஒளிர்ந்தானே அவன் கடமை கொண்டு

அவனியது போற்றியது அவளை நிலவாய் கண்டு
அவனியது காட்டியது அவனை ஆதவன் என்று
அவனியது விரும்பியது அதன் விளையாட்டில் ஒன்று
அவனும் அவளும் பார்த்தனரே விதியைக் கொண்டு

மோதலுக்கு அழைத்தானே அவளைக் கண்டு
மோதலிலும் கலங்கினாளே அவனைக் கண்டு
மோதுவதிலும் ஆனந்தம் இருவருமே கண்டு
மோதிரம் மாற்றினரே காதல் கொண்டு

1 comment:

கார்த்திக் பிரபு said...

hi pls add my googlepages in your blog frends list or favorites

its a page for tamil ebooks , free downloads.

thanks for addding

url - http://gkpstar.googlepages.com/