Monday, September 03, 2007

கோகுலாஷ்டமி

அஷ்டமி திதி
ரோஹிணி நட்சத்திரம்
நள்ளிரவு நேரம்
இருண்ட சிறை
எட்டாவது குழந்தை
கருநீல உருவம்
இவையாய் நீ பிறந்தாய்

பல மனைகளில் வெண்ணெய் திருடி
எண்ணற்ற கோபியருடன் நடனமாடி
கணக்கற்ற மனைவியரை மணந்து
பற்பல அரக்கர்களை அழித்து
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் அளித்து
தர்மயுத்தமென்ற பெயரில் பூபாரத்தை குறைத்து
யாதவர் குலத்தின் திமிரை ஒடுக்கி
உத்தவனுக்கு மீண்டும் ஞானபோதேசமளித்து
உலகினைவிட்டு மறைந்த கண்ணனே
உனக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வந்திடுவாய் சிறு கண்ணனாய்
ஏந்திடுவாய் சிறு கைகளை
பற்றிடுவாய் என் கைகளை
பெற்றிடுவாய் என் சீடைகளை
கட்டிடுவாய் உன் அன்பினால்
வெட்டிடுவாய் என் அறியாமையை
தரித்திடுவாய் வெகுளிப் பார்வையை
சிரித்திடுவாய் என் மனமகிழ

கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ
கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ

1 comment: