அஷ்டமி திதி
ரோஹிணி நட்சத்திரம்
நள்ளிரவு நேரம்
இருண்ட சிறை
எட்டாவது குழந்தை
கருநீல உருவம்
இவையாய் நீ பிறந்தாய்
பல மனைகளில் வெண்ணெய் திருடி
எண்ணற்ற கோபியருடன் நடனமாடி
கணக்கற்ற மனைவியரை மணந்து
பற்பல அரக்கர்களை அழித்து
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் அளித்து
தர்மயுத்தமென்ற பெயரில் பூபாரத்தை குறைத்து
யாதவர் குலத்தின் திமிரை ஒடுக்கி
உத்தவனுக்கு மீண்டும் ஞானபோதேசமளித்து
உலகினைவிட்டு மறைந்த கண்ணனே
உனக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
வந்திடுவாய் சிறு கண்ணனாய்
ஏந்திடுவாய் சிறு கைகளை
பற்றிடுவாய் என் கைகளை
பெற்றிடுவாய் என் சீடைகளை
கட்டிடுவாய் உன் அன்பினால்
வெட்டிடுவாய் என் அறியாமையை
தரித்திடுவாய் வெகுளிப் பார்வையை
சிரித்திடுவாய் என் மனமகிழ
கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ
கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Very nice
Surya
Post a Comment