
வெண்மையும் கருமையும் சேர்ந்து நிற்கும்
இளமையும் முதுமையும் அணைத்து நிற்கும்
ஏழ்மையும் செழிப்பும் கலந்து நிற்கும்
பக்தையும் கண்ணனும் புரிந்து நிற்கும்
துளசி மணிமாலை கழுத்திலே நிற்கும்
ஹரே கிருஷ்ண நாமம் நெற்றியில் நிற்கும்
விதவையும் குமரியும் மகிழ்ந்து நிற்கும்
ராதைகள் கண்ணனுக்காக ஏங்கி நிற்கும்
குள்ளமும் உயரமும் புரிந்து நிற்கும்
வியர்வையும் சுகந்தமும் சுகித்து நிற்கும்
பகலென்றும் இரவென்றும் பாராது நிற்கும்
அன்பென்ற கடலில் குளித்து நிற்கும்
அறிவும் அனுபவமும் அறிந்து நிற்கும்
பரிவும் பண்பும் இனித்து நிற்கும்
மலரும் பக்தியாய் ருசித்து நிற்கும்
கண்களில் கண்ணனை ஒளித்து நிற்கும்
வேறுபாடு காணா உள்ளம் நிற்கும்
பகுத்தறிவால் வாதிடா நெஞ்சம் நிற்கும்
இதயத்தில் பக்தியெனும் மார்க்கம் நிற்கும்
உயிரே கண்ணனாய் மாறி நிற்கும்
No comments:
Post a Comment