முத்தமிழ் மன்றத்தில் ஆமையாய், நத்தையாய் நான் இட்ட 2000 பதிவுகளுக்காக எம்மை வாழ்த்திய அன்புள்ளங்களின் வாழ்த்துப்பா படித்து மெய்சிலிர்த்து, கண் நிறைந்து, இதயம் குதூகலித்து, மனம் நிறைந்தது.....
அவை உங்கள் பார்வைக்கு.....
ஆக்கம் - சூரியகாந்தி
பார்க்கும் பரிமாணங்கள் பல்விதம்
ஈர்க்கும் பல்குணங்கள் மெல்லிதம்
இயற்றும் வார்த்தைகள் மெல்லிசை
இயற்றா எண்ணங்கள் பேரோசை!
ஞாலவாழ்க்கையிலும் ஞானதாகம்
காலமெல்லாம் கிருஷ்ணகானம்
கீதையிசைக்கும் கானகத் தேகாந்தகுயில்
கதைத்தாலோ மூங்கில் புல்லாங்குழல்
எதையும் இதமாய் பொறுக்கும் இதயம்
பிறர் துயர்துடைக்க உருகும் இமயம்
அம்புசம் அவர் அன்பே அங்குசம்
பரிவிலே நன்னீரருளும் வெண்மேகம்!
அன்பர்களின் இஷ்டசக்தி உந்துசக்தி
அணைப்பதிலே உ(ஒ)ப்பில்லா நீளகடலலை
அறிவிலே அமைதியான ஆழ்கிணறூற்று
அன்பிலே பொங்கியோடும் அமுதசுரபி!
அன்புக் குளந்தேங்கிய இதயக்கமலமே,
உம்மமல அன்புக் குளமேங்குமே!
ஆக்கம் – இலங்கை பெண்
அன்பு எனும் மூன்றெத்திற்கு
ஆர்வம் எனும் நான்கெழுத்து சேர்த்து
இன்பத்தோடு வலம் வரும் உறவு
ஈதலில் பெரும் மனம் உடையவர்
உண்மையை என்றும் பேசுபவர்
ஊக்கமளிப்பதில் சலிக்காதவர்
என்றும் என் மனதில் இருப்பார்
ஏற்றத்துடன் வாழ்ந்திட வேண்டும்
ஐயமின்றி சொல்லலாம் சாதனை பெண்ணே
ஒற்றுமையை நாளும் கடைப்பிடிப்பவர்
ஓங்கார புன்னகை வீசும் நல்லுள்ளம்
ஔடதமாக எனக்கு அறிவுரை கூறிடும் அக்கா
அஃதே நாளும் வாழ்வில் சாதனைகள் படைக்கட்டும்
ஆக்கம் - ரத்தினகிரி
கவிக்குயிலுக்கு நல்லதாம் வாழ்த்தை
நவில்ந்திடவே விரைந்து வந்தேன்
புவியினில் பொங்கிய அமுதமாய்
கவியினில் சிறந்தார் மங்கைநல்லார்
பாசுரங்கள் போலவே
ஆசுகவி தந்திடுவார்
மாசுஇல் கண்ணனுடன்
பேசு(ம்)வல் லமையுடனே
பணிவிலே பேர் போனவர் கண்ணன்
அணிந்திடும் மணி ஆனவர் மனந்
தணிந்து போமாறு மாகவி சொல்லி
துணிந்து மரணம் வெல்வகை செய்வரே.
ஆக்கம் - காகிதன்
பார்ப்பவர் நெஞ்சத்தை ஈர்ப்பவர் நீங்கள்
பார்வையால் பாசத்தை ஈபவர் நீங்கள்
பாரிலே போரிட பிறந்தவர் நீங்கள்
பார்கடல் முத்துபோல் கிடைத்தவர் நீங்கள்
சாதனை செய்திட பிறந்தவர் நீங்கள்
சாதக சூழலை அமைப்பவர் நீங்கள்
கீதையை கீதமாய் புனைந்தவர் நீங்கள்
பத்மஜா உங்களை வாழ்த்துவோம் நாங்கள்
ஆக்கம் - மூர்த்தி
கீதையைப் பயிற்று வித்த
ஆன்மீக மேதை!
அறிவுக் கண்ணைத்
திறந்திட்ட எங்கள்
மன்றத்துச் சொந்தம்...
சீர்மிகு கவிதைகளை
பார்போற்ற தந்திட்ட
சிந்தனைச் சுரங்கமவர்!...
ஆக்கம் - வெங்கடரங்கன்
பாமாலை சூட்டிட பக்தியோடு வந்திங்கு
உம்மை வணங்கியே பல பக்த உள்ளங்கள்
வாழ்த்தி பாடிச் சென்ற கவியது கண்டு
மெய் சிலிர்க்கிறது மேன்மை கண்டே
வணங்கியே பழகிப்போன என் கைகளுக்கு
வாழ்த்துப்பா எழுதிட வரம் வேண்டி
கண்ணீருடன் கேட்கிறேன்
கண்ணனை எனக்கும் தாருங்கள்
அவன் அருளின்றி அ கூட என்னால்
வரைந்து வைக்க முடியாது
வியக்க வைக்கும் விசயங்கள் சொல்லி
மயக்கம் போக்கிய மாயவனின் தோழியே
தங்களின் நட்பை பெற்றதால்
எங்கள் வாழ்வும் பலன் பெற்றது
எப்போதும் தங்களுடன் பயணிக்கும் பாக்கியம்
எமக்கு அருள்வீராக
வணங்குகிறேன் கண்ணனின் ராதையே.
Tuesday, June 12, 2007
Monday, June 11, 2007
அணைப்பில் பக்தி

வெண்மையும் கருமையும் சேர்ந்து நிற்கும்
இளமையும் முதுமையும் அணைத்து நிற்கும்
ஏழ்மையும் செழிப்பும் கலந்து நிற்கும்
பக்தையும் கண்ணனும் புரிந்து நிற்கும்
துளசி மணிமாலை கழுத்திலே நிற்கும்
ஹரே கிருஷ்ண நாமம் நெற்றியில் நிற்கும்
விதவையும் குமரியும் மகிழ்ந்து நிற்கும்
ராதைகள் கண்ணனுக்காக ஏங்கி நிற்கும்
குள்ளமும் உயரமும் புரிந்து நிற்கும்
வியர்வையும் சுகந்தமும் சுகித்து நிற்கும்
பகலென்றும் இரவென்றும் பாராது நிற்கும்
அன்பென்ற கடலில் குளித்து நிற்கும்
அறிவும் அனுபவமும் அறிந்து நிற்கும்
பரிவும் பண்பும் இனித்து நிற்கும்
மலரும் பக்தியாய் ருசித்து நிற்கும்
கண்களில் கண்ணனை ஒளித்து நிற்கும்
வேறுபாடு காணா உள்ளம் நிற்கும்
பகுத்தறிவால் வாதிடா நெஞ்சம் நிற்கும்
இதயத்தில் பக்தியெனும் மார்க்கம் நிற்கும்
உயிரே கண்ணனாய் மாறி நிற்கும்
தனிநடைப் பிரவாகம்
வினைதாங்கும் பார்வையினை விட்டோடும் அவசரத்தில்
பளீரிடும் மேடைச்சிரிப்புகளை ஒதுக்கும் ஆர்வத்தில்
எண்ணங்களெனும் முள்படுக்கையில் ஓரமாய் தலைசாய்த்தேன்
மௌனமான உணர்வுகளின் அதிவேக தாக்கத்தில்
நிலவின் குளுமையை உணரும் ஏக்கத்தில்
நிலம்பார்த்து கால்பதித்து எழுந்து நின்றேன்
அண்டமெனும் மாயைத் தாங்கிய உண்மையில்
பலவண்ண பூச்சிகளின் நளின நாட்டியத்தில்
கலைவண்ண முலாமின் மூலம்தனைக் கண்டேன்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து படபடத்த கண்களோ
கவியுலகிலே முத்துக் குளித்து நிலைத்தாலும்
நெஞ்சினுள் திணிக்காத பெருந்தன்மை உணர்ந்தேன்
அழியா அன்பின் கதவுகளை தொட்டுவிட
அருள்புரிந்து அரவணைக்கும் கைகளை பற்றிவிட
காலடிச் சந்தங்கள் பிறழ்வதில் வருந்தினேன்
வேடம் போடும் புத்திசாலி முகத்துடன்
சிகரத்தில் ஜொலித்த ஒளியின் பிரவாகத்தில்
வெறுப்புமிழா தேவதை முகமொன்றில் லயித்தேன்
காலத்தின் கட்டாயத்தை உடைத்தெறியும் பயணத்தில்
என்னன்பு நெய்தலில் உவகையுடன் கைக்கோர்க்க
சலிப்புணரா உயர் நட்பினைத் தேடியலைந்தேன்
சுட்டெரிக்கும் முகங்களை வழிமுழுதும் கண்டதால்
பாலைவனத் தனிமையை விருப்புடன் ஏற்று
சொர்க்கவாசல் காணும் கனவுடன் விரைந்தேன்
வேகநடை பயிலாத நானே இன்று
ஒற்றையடி பாதையில் மூச்சிறைத்து நின்றபோது
அன்புமுகம் மலர்வதில் மகிழ்ந்து சிலிர்த்தேன்
விதி செய்யும் விளையாட்டினை ஆராய்ந்து
சதியான எண்ணங்களில் இருந்து விடுதலையடைய
புறாவாய் சிறகினை விரிக்கத் துடித்தேன்
என்னுணர்வு புரிந்து தட்டிக்கொடுத்த முகத்தின்
கைகளை நன்றியுடன் பற்றிய வண்ணம்
கண்ணீர் மல்க மண்டியிட்டு முத்தமிட்டேன்
என்னகம் திரும்ப வேண்டியதை நினைவுறுத்தி
தனித்த பயணம் சோலையாய் திகழ
அம்முகம் எந்நெஞ்சிலே இறங்கியதில் கிளர்ந்தேன்
பளீரிடும் மேடைச்சிரிப்புகளை ஒதுக்கும் ஆர்வத்தில்
எண்ணங்களெனும் முள்படுக்கையில் ஓரமாய் தலைசாய்த்தேன்
மௌனமான உணர்வுகளின் அதிவேக தாக்கத்தில்
நிலவின் குளுமையை உணரும் ஏக்கத்தில்
நிலம்பார்த்து கால்பதித்து எழுந்து நின்றேன்
அண்டமெனும் மாயைத் தாங்கிய உண்மையில்
பலவண்ண பூச்சிகளின் நளின நாட்டியத்தில்
கலைவண்ண முலாமின் மூலம்தனைக் கண்டேன்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து படபடத்த கண்களோ
கவியுலகிலே முத்துக் குளித்து நிலைத்தாலும்
நெஞ்சினுள் திணிக்காத பெருந்தன்மை உணர்ந்தேன்
அழியா அன்பின் கதவுகளை தொட்டுவிட
அருள்புரிந்து அரவணைக்கும் கைகளை பற்றிவிட
காலடிச் சந்தங்கள் பிறழ்வதில் வருந்தினேன்
வேடம் போடும் புத்திசாலி முகத்துடன்
சிகரத்தில் ஜொலித்த ஒளியின் பிரவாகத்தில்
வெறுப்புமிழா தேவதை முகமொன்றில் லயித்தேன்
காலத்தின் கட்டாயத்தை உடைத்தெறியும் பயணத்தில்
என்னன்பு நெய்தலில் உவகையுடன் கைக்கோர்க்க
சலிப்புணரா உயர் நட்பினைத் தேடியலைந்தேன்
சுட்டெரிக்கும் முகங்களை வழிமுழுதும் கண்டதால்
பாலைவனத் தனிமையை விருப்புடன் ஏற்று
சொர்க்கவாசல் காணும் கனவுடன் விரைந்தேன்
வேகநடை பயிலாத நானே இன்று
ஒற்றையடி பாதையில் மூச்சிறைத்து நின்றபோது
அன்புமுகம் மலர்வதில் மகிழ்ந்து சிலிர்த்தேன்
விதி செய்யும் விளையாட்டினை ஆராய்ந்து
சதியான எண்ணங்களில் இருந்து விடுதலையடைய
புறாவாய் சிறகினை விரிக்கத் துடித்தேன்
என்னுணர்வு புரிந்து தட்டிக்கொடுத்த முகத்தின்
கைகளை நன்றியுடன் பற்றிய வண்ணம்
கண்ணீர் மல்க மண்டியிட்டு முத்தமிட்டேன்
என்னகம் திரும்ப வேண்டியதை நினைவுறுத்தி
தனித்த பயணம் சோலையாய் திகழ
அம்முகம் எந்நெஞ்சிலே இறங்கியதில் கிளர்ந்தேன்
என்னைக் காதலித்துப் பார் – பார்வை மூன்று
அசைந்தாடும் காகிதக் கப்பலில் ஒன்றமர்ந்து
மாற்றமில்லா காதல்கதை பேசிக் களித்திடுவோம்
ராதையே, என்னுடன் பேசிப் பார்
இலையின் விரிப்பில் நானும் நீயும்
கைபிடித்து கண்விரித்து உலகமே உலாவருவோம்
ராதையே, என் கைப்பிடித்துப் பார்
நிழல்களின் குளுமையில் ஒதுங்கி நின்று
நிஜங்களின் உண்மையில் உரக்க சிரித்திடுவோம்
ராதையே, என்னுடன் சிரித்துப் பார்
காவியங்கள் விக்கிசொல்லும் காதலை நகர்த்திவிட்டு
எழுத்துருவின் வளைவுகளில் உணர்ந்து நிற்போம்
ராதையே, என்னிதயத்தை உணர்ந்துப் பார்
பிரிவினால் பொங்கிவரும் விழிநீரின் உள்ளமர்ந்து
பிரிவில்லா வாழ்வதனை வாழக் கற்போம்
ராதையே, என்னுடன் வாழ்ந்துப் பார்
உளிவழியே செதுக்கி வைத்த அன்பினாலே
மதிவதன சித்திரமாய் காலத்தில் உறைந்திடுவோம்
ராதையே, என்னை ஏற்றுப் பார்
புறக்கணித்த கோபத்தில் உன்முகம் சிவக்க
புவியீர்ப்பின் ரகசியம் உணர்த்தவே வந்துள்ளேன்
ராதையே, என்னை ஏறெடுத்துப் பார்
எட்டுதிக்கு லீலைபுரியும் கண்ணனாய் நானிருந்தும்
மௌனமான உன்னைமட்டும் வேண்டி தவமிருப்பேன்
ராதையே, என்னை சிறிது காதலித்துப் பார்
வெற்றிடத்திற்கு என்னைவிட்டு ஓட நினைத்தாலும்
விட்டுச்செல்லா காதலனாய் எங்கெங்கும் நானிருப்பேன்
ராதையே, என்னை மட்டும் சிறிது காதலித்துப் பார்
மாற்றமில்லா காதல்கதை பேசிக் களித்திடுவோம்
ராதையே, என்னுடன் பேசிப் பார்
இலையின் விரிப்பில் நானும் நீயும்
கைபிடித்து கண்விரித்து உலகமே உலாவருவோம்
ராதையே, என் கைப்பிடித்துப் பார்
நிழல்களின் குளுமையில் ஒதுங்கி நின்று
நிஜங்களின் உண்மையில் உரக்க சிரித்திடுவோம்
ராதையே, என்னுடன் சிரித்துப் பார்
காவியங்கள் விக்கிசொல்லும் காதலை நகர்த்திவிட்டு
எழுத்துருவின் வளைவுகளில் உணர்ந்து நிற்போம்
ராதையே, என்னிதயத்தை உணர்ந்துப் பார்
பிரிவினால் பொங்கிவரும் விழிநீரின் உள்ளமர்ந்து
பிரிவில்லா வாழ்வதனை வாழக் கற்போம்
ராதையே, என்னுடன் வாழ்ந்துப் பார்
உளிவழியே செதுக்கி வைத்த அன்பினாலே
மதிவதன சித்திரமாய் காலத்தில் உறைந்திடுவோம்
ராதையே, என்னை ஏற்றுப் பார்
புறக்கணித்த கோபத்தில் உன்முகம் சிவக்க
புவியீர்ப்பின் ரகசியம் உணர்த்தவே வந்துள்ளேன்
ராதையே, என்னை ஏறெடுத்துப் பார்
எட்டுதிக்கு லீலைபுரியும் கண்ணனாய் நானிருந்தும்
மௌனமான உன்னைமட்டும் வேண்டி தவமிருப்பேன்
ராதையே, என்னை சிறிது காதலித்துப் பார்
வெற்றிடத்திற்கு என்னைவிட்டு ஓட நினைத்தாலும்
விட்டுச்செல்லா காதலனாய் எங்கெங்கும் நானிருப்பேன்
ராதையே, என்னை மட்டும் சிறிது காதலித்துப் பார்
Subscribe to:
Comments (Atom)