Tuesday, October 17, 2006

இறை வணக்கம்

கல்லாகி மண்ணாகி காற்றாகி நீராகி
விதையாகி துளிராகி இலையாகி செடியாகி
கொடியாகி மரமாகி பூவாகி காயாகி
பழமாகி உணவாகி உறவாகி சொல்லாகி
அன்பாகி உயிராகி தாயாகி கன்றாகி
சுகம் துக்கம் தந்தருளும் இறைவனுமாகி
என்னையும் இவ்வுலகில் நடமாட வைக்கும்
உனக்கு நன்றிகலந்த காலை வணக்கம்

ஒவ்வொரு நாளும் கடைசி நாளே
என்றே துவக்கும் நான் வேண்டுவது
பிறர் மனம்நோகா வரம் ஒன்றே
என் இறப்பு யாருக்கும் வியப்பில்லை
இழப்பிற்கு வருந்ததக்க உயிரும் இல்லை
நீ ஊஞ்சலில் ஆடியபடி என்னை அழைக்க
உன் மடியில் குழந்தையாகி தலைவைத்து
அன்பான கோதலுடன் சிரித்துக்கொண்டே
என்னை ஏற்றுக்கொள்ளும் நாளும் இதுவோ
என்றே காத்திருக்கிறேன் தினம் தினம்

1 comment: