கல்லாகி மண்ணாகி காற்றாகி நீராகி
விதையாகி துளிராகி இலையாகி செடியாகி
கொடியாகி மரமாகி பூவாகி காயாகி
பழமாகி உணவாகி உறவாகி சொல்லாகி
அன்பாகி உயிராகி தாயாகி கன்றாகி
சுகம் துக்கம் தந்தருளும் இறைவனுமாகி
என்னையும் இவ்வுலகில் நடமாட வைக்கும்
உனக்கு நன்றிகலந்த காலை வணக்கம்
ஒவ்வொரு நாளும் கடைசி நாளே
என்றே துவக்கும் நான் வேண்டுவது
பிறர் மனம்நோகா வரம் ஒன்றே
என் இறப்பு யாருக்கும் வியப்பில்லை
இழப்பிற்கு வருந்ததக்க உயிரும் இல்லை
நீ ஊஞ்சலில் ஆடியபடி என்னை அழைக்க
உன் மடியில் குழந்தையாகி தலைவைத்து
அன்பான கோதலுடன் சிரித்துக்கொண்டே
என்னை ஏற்றுக்கொள்ளும் நாளும் இதுவோ
என்றே காத்திருக்கிறேன் தினம் தினம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good One!
Post a Comment