கடலலையின் தாலாட்டில் புரள்வோமா
செம்பருத்தி சிவப்பினுள் மறைவோமா
வைரத்தினை உறைவிடமாய் கொள்வோமா
என்னைக் காதலித்துதான் பாரம்மா
தாலாட்டில் புரண்டிடு அவளுடன்
சிவப்பினுள் மறைந்திடு இவளுடன்
உறைந்து மகிழ்ந்திடு இருவருடன்
என்னை விட்டுவிடு மகிழ்வுடன்
இசைகேட்டும் ஒதுங்குவது ஏனம்மா
வார்த்தையால் சாடுவது ஏனம்மா
கோபத்தின் காரணம்தான் யாதம்மா
என்னை காதலித்துதான் பாரம்மா
ஒதுங்க முடியாமல் தவிப்பது நானல்லவோ
உன்னை சாடாமலே துடிப்பது நானல்லவோ
காரணமும் காரியமும் என்வாழ்வில் நீயல்லவோ
என்னைக் காதலிக்கத் தூண்டியதும் நீயல்லவோ
கண்ணனின் ராதையே நீதானம்மா
காதலர்கள் சின்னமே நாம்தானம்மா
கவிதைகள் பொழிந்திடும் கண்ணம்மா
என்னுடன் சேர்ந்திடுவாய் செல்லம்மா
பிரிந்தே வாழ்ந்திடுவோம் உலகிற்காக
சிரித்தே அழுதிடுவோம் உலகிற்காக
பாராமலே இருந்திடுவோம் உலகிற்காக
மறவாமல் இறந்திடுவோம் உலகிற்காக
பிரிவு நீயெனில் பிறப்பிலும் நீயே
இருப்பு நீயெனில் இறப்பிலும் நீயே
சிரிப்பு நீயெனில் சிறப்பிலும் நீயே
பிரபஞ்சம் நானெனில் நானே நீயே
இசையின் நாயகனே செல்கிறேன் நான்
இல்லத்தின் கூவலில் கரைகிறேன் நான்
காதலை மறைத்திட்டு வாழ்கிறேன் நான்
காத்திருப்பேன் உனக்காக என்னென்றும் நான்
Wednesday, August 29, 2007
Tuesday, August 14, 2007
என்னைக் காதலித்துப் பார் – பார்வை நான்கு
இலைகளின் சலசலப்பில் கேட்டது உன்னிசை
இமைகளின் படபடப்பில் கேட்டது உன்னிசை
இதழ்களின் குவிதலில் கேட்டது உன்னிசை
இனியவள் இதயத்திலும் கேட்டது உன்னிசை
காகிதக் கப்பல் பாடியது உன்னிசை
கானகத்து பயங்கரம் பாடியது உன்னிசை
காதோரக் காற்று பாடியது உன்னிசை
காதலியின் இதயத்திலும் பாடியது உன்னிசை
நிழல்களின் மௌனத்தில் உறைந்தது உன்னிசை
நிஜங்களின் அசைவுகளில் உறைந்தது உன்னிசை
நியதிகளின் கடுமையில் உறைந்தது உன்னிசை
நிர்மல இதயத்திலும் உறைந்தது உன்னிசை
மோனைகளின் வரிசையில் சிலிர்த்தது உன்னிசை
மோகனப் புன்னகையில் சிலிர்த்தது உன்னிசை
மோகினி அழகாய் சிலிர்த்தது உன்னிசை
மோன இதயத்திலும் சிலிர்த்தது உன்னிசை
வெள்ளை நிறமாய் நிறைந்தது உன்னிசை
வெயில் கடுமையிலும் நிறைந்தது உன்னிசை
வெற்றிட சாரமாய் நிறைந்தது உன்னிசை
வெகுளி மனதில் நிறைந்தது உன்னிசை
மரண ஓலத்தில் ஒலித்தது உன்னிசை
மகரந்த சேர்க்கையில் ஒலித்தது உன்னிசை
மதுவின் சிதறல்களில் ஒலித்தது உன்னிசை
மதியழகி இதயத்திலும் ஒலித்தது உன்னிசை
உன் மொழியாய் வருடியது உன்னிசை
உன் காதலாய் வருடியது உன்னிசை
உன் அழைப்பாய் வருடியது உன்னிசை
உன்னவள் இதயத்திலும் வருடியது உன்னிசை
காதலன் வரவை உரைக்கிறதோ உன்னிசை
காதல் தேவையென சொல்கிறதோ உன்னிசை
காதலிக்க கற்றுத் தருகிறதோ உன்னிசை
காதலியாய் புதியவளை நாடுகிறதோ உன்னிசை
என்னை பைத்தியம் என்கிறதோ உன்னிசை
என்னை வைத்தியம் செய்கிறதோ உன்னிசை
என் மதியை மயக்குமா உன்னிசை
என் விதியை வெல்லுமா உன்னிசை
இமைகளின் படபடப்பில் கேட்டது உன்னிசை
இதழ்களின் குவிதலில் கேட்டது உன்னிசை
இனியவள் இதயத்திலும் கேட்டது உன்னிசை
காகிதக் கப்பல் பாடியது உன்னிசை
கானகத்து பயங்கரம் பாடியது உன்னிசை
காதோரக் காற்று பாடியது உன்னிசை
காதலியின் இதயத்திலும் பாடியது உன்னிசை
நிழல்களின் மௌனத்தில் உறைந்தது உன்னிசை
நிஜங்களின் அசைவுகளில் உறைந்தது உன்னிசை
நியதிகளின் கடுமையில் உறைந்தது உன்னிசை
நிர்மல இதயத்திலும் உறைந்தது உன்னிசை
மோனைகளின் வரிசையில் சிலிர்த்தது உன்னிசை
மோகனப் புன்னகையில் சிலிர்த்தது உன்னிசை
மோகினி அழகாய் சிலிர்த்தது உன்னிசை
மோன இதயத்திலும் சிலிர்த்தது உன்னிசை
வெள்ளை நிறமாய் நிறைந்தது உன்னிசை
வெயில் கடுமையிலும் நிறைந்தது உன்னிசை
வெற்றிட சாரமாய் நிறைந்தது உன்னிசை
வெகுளி மனதில் நிறைந்தது உன்னிசை
மரண ஓலத்தில் ஒலித்தது உன்னிசை
மகரந்த சேர்க்கையில் ஒலித்தது உன்னிசை
மதுவின் சிதறல்களில் ஒலித்தது உன்னிசை
மதியழகி இதயத்திலும் ஒலித்தது உன்னிசை
உன் மொழியாய் வருடியது உன்னிசை
உன் காதலாய் வருடியது உன்னிசை
உன் அழைப்பாய் வருடியது உன்னிசை
உன்னவள் இதயத்திலும் வருடியது உன்னிசை
காதலன் வரவை உரைக்கிறதோ உன்னிசை
காதல் தேவையென சொல்கிறதோ உன்னிசை
காதலிக்க கற்றுத் தருகிறதோ உன்னிசை
காதலியாய் புதியவளை நாடுகிறதோ உன்னிசை
என்னை பைத்தியம் என்கிறதோ உன்னிசை
என்னை வைத்தியம் செய்கிறதோ உன்னிசை
என் மதியை மயக்குமா உன்னிசை
என் விதியை வெல்லுமா உன்னிசை
Saturday, August 04, 2007
விண்ணப்பித்தேன்
சளைக்காமல் காடுகளில் திரிந்தேன்
இலவசமாய் பூக்களை முகர்ந்தேன்
இனிப்பான இல்லமதில் வசித்தேன்
உல்லாசத் தேனீயாய் வாழ்ந்தேன்
புரியாமல் பறந்து உழைத்தேன்
சுறுசுறுப்பாய் என்னை வளைத்தேன்
மாளிகையை நிரப்பி ரசித்தேன்
தேனடையில் உயிரை வைத்தேன்
மனிதனின் சுயநலம் உணர்ந்தேன்
என்னுழைப்பை காத்திட விழைந்தேன்
அழிக்கும் கோபத்தில் விழுந்தேன்
உணர்வினை அறவே துறந்தேன்
இழப்பின் வருத்தத்தில் கொதித்தேன்
கடித்திட்டு வென்றிட நினைத்தேன்
புயலென எண்ணமதை முடித்தேன்
வெற்றிக் களிப்பில் திளைத்தேன்
ஆ! மூச்சின் தடுமாற்றத்தில் அழுதேன்
உணர்வுகளின் ஒடுக்கத்தில் ஒளிந்தேன்
அன்பின் மகத்துவம் அறிந்தேன்
புரிந்தும் வாழ்வினை தொலைத்தேன்
தத்துவம் கேளாமல் வளர்ந்தேன் (எனினும்)
மன்னிப்பே வெற்றியென உணர்ந்தேன்
இறப்பினில் ஒளியினை அறிந்தேன்
சுருண்ட உடலாய் உறைந்தேன்
சினத்தின் வேகமது வேண்டேன்
மன்னிக்கா குணமது வேண்டேன்
தேனீயாய் மறுபிறவி வேண்டேன்
என்றே இறைவனிடம் விண்ணப்பித்தேன்
நிறைவாய் மனதினுள் சிரித்தேன்
தேனீயாய் வாழ்வினை முடித்தேன்
காற்றினில் உயிரைக் கலந்தேன்
இனிமையின் சாரத்தில் மறைந்தேன்
இலவசமாய் பூக்களை முகர்ந்தேன்
இனிப்பான இல்லமதில் வசித்தேன்
உல்லாசத் தேனீயாய் வாழ்ந்தேன்
புரியாமல் பறந்து உழைத்தேன்
சுறுசுறுப்பாய் என்னை வளைத்தேன்
மாளிகையை நிரப்பி ரசித்தேன்
தேனடையில் உயிரை வைத்தேன்
மனிதனின் சுயநலம் உணர்ந்தேன்
என்னுழைப்பை காத்திட விழைந்தேன்
அழிக்கும் கோபத்தில் விழுந்தேன்
உணர்வினை அறவே துறந்தேன்
இழப்பின் வருத்தத்தில் கொதித்தேன்
கடித்திட்டு வென்றிட நினைத்தேன்
புயலென எண்ணமதை முடித்தேன்
வெற்றிக் களிப்பில் திளைத்தேன்
ஆ! மூச்சின் தடுமாற்றத்தில் அழுதேன்
உணர்வுகளின் ஒடுக்கத்தில் ஒளிந்தேன்
அன்பின் மகத்துவம் அறிந்தேன்
புரிந்தும் வாழ்வினை தொலைத்தேன்
தத்துவம் கேளாமல் வளர்ந்தேன் (எனினும்)
மன்னிப்பே வெற்றியென உணர்ந்தேன்
இறப்பினில் ஒளியினை அறிந்தேன்
சுருண்ட உடலாய் உறைந்தேன்
சினத்தின் வேகமது வேண்டேன்
மன்னிக்கா குணமது வேண்டேன்
தேனீயாய் மறுபிறவி வேண்டேன்
என்றே இறைவனிடம் விண்ணப்பித்தேன்
நிறைவாய் மனதினுள் சிரித்தேன்
தேனீயாய் வாழ்வினை முடித்தேன்
காற்றினில் உயிரைக் கலந்தேன்
இனிமையின் சாரத்தில் மறைந்தேன்
Subscribe to:
Comments (Atom)